இந்தியா

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் – இவ்வளவு பணம் இருந்தும் ஒரு பிரச்னை!?

கணக்கில்லாமல் பணம் இருந்தும் சோதிக்கும் கடவுள்…
உடல் எடையை குறைக்க படாத பாடு படும் ஆனந்த் அம்பானி…
ஒன்னரை வருடங்கள் போராடி 108 கிலோ எடையை குறைத்துள்ளார்…

திருமணத்தை எதிர்நோக்கியுள்ள ஆனந்த் அம்பானி, பல ஆயிரம் கோடி செலவில், நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். அழகான மனைவி கிடைக்க உள்ளார். ஆனாலும் அவரது உடல் பலரின் பார்வையையும் உறுத்தி வருகிறது. இவ்வளவு பணம் வைத்திருப்பவரால் ஏன் உடல் எடையை குறைக்க முடியவில்லை என்பது தான் பலரின் கேள்வி.

இதற்கான பதிலை அவரது தாயார் நீட்டா அம்பானி அளித்துள்ளார். அதனை பார்க்கலாம். சிறு வயதில் இருந்தே, ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டுள்ளவர் ஆனந்த் அம்பானி.

இதனால் ஸ்டீராய்டு மருந்துகள் எடுத்துக் கொண்ட நிலையில், அவரது உடல் எடையும் படிப்படியாக அதிகரித்துள்ளது.
ஒருக் கட்டத்தில் 208 கிலோ எடைக்கு வந்துள்ளார். இது அவரது குடும்பத்தினரை பெரும் கவலையில் ஆழ்த்தியது.

இதனையடுத்து, தனது மகனின் உடல் எடையை குறைக்க வேண்டும் என முடிவு செய்த, தயார் நீட்டா அம்பானி, அவரை அமெரிக்காவில் உள்ள உடல் பருமன் குறைப்பு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு கடும் பயிற்சிகள் அவருக்கு கொடுக்கப்பட்டுள்ளன. தினமும் 5 முதல் 6 மணி நேரம் உடற்பயிற்சி செய்துள்ளார்.

நாள் ஒன்றுக்கு 21 கிலோ நடைபயிற்சி மேற்கொண்டுள்ளார். யோகா பயிற்சி, மனதை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கான பயிற்சிகளை மேற்கொண்டுள்ளார். கலோரிகளை எரித்தல், தசைகளை வலுவாக்குதல் ஆகியவற்றிற்காக, கார்டியோ பயிற்சிகள், எடை தூக்குதல் உள்ளிட்ட பல பயிற்சிகளை மேற்கொண்டுள்ளார்.

முயற்சி உடையார், இகழ்ச்சி அடையார் என்பதற்கு உதாரணமாக அவரது 18 மாத கடும் பயிற்சி பெரும் பலனை கொடுத்தது. இந்தக் காலக்கட்டத்தில் சுமார் 100 கிலே எடையை அவர் குறைத்துவிட்டு, வெற்றிகரமாக இந்தியா திரும்பினார். பாலிவுட் பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் அவரை பாராட்டினர்.

அதே நேரம் தொடர்ந்து உடலை அதே கட்டுப்பாட்டுடன் வைக்க அவரது உடல் நிலை ஒத்துழைக்கவில்லை. மீண்டும் மருந்துகள் காரணமாக அவர் எடை படிப்படியாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாகவே தற்போது, திருமணத்தின் போது கூட, அவரால் அதிக அளவில் எடையை குறைக்க முடியவில்லை எனத் தெரியவந்துள்ளது.

இந்த உலகத்தில் வாழும் பெரும்பாலான மனிதர்கள் தங்களுடைய நேரத்தை பணம் சம்பாதிப்பதற்காகவே அதிகம் செலவிடுவார்கள். அந்த அளவிற்கு அடிப்படை தேவைகள் கூட பூர்த்தியாத மனிதர்களே பெரும்பாலும் உள்ளனர்.

பணம் அவ்வளவு முக்கியம். ஆனால், 10 தலைமுறைக்கு அல்ல. 100 தலைமுறைக்கு தேவையான சொத்துக்களை இப்போதே சேர்த்துள்ளனர் ஆனந்த் அம்பானி. அவரது தாத்தா, தந்தை மூலமாக அவருக்கு இந்த சொத்துக்கள் கிடைத்துள்ளன.

ஆனால் இவருக்கு ஆண்டவன் வைத்த ஒரு செக் தான் உடல்நலம்.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது தமிழ் முதுமொழி.

ஆனந்த் அம்பானிக்கு கணக்கில்லாமல் பணத்தை கொடுத்த இறைவன் உடல்நலத்தை கொடுக்கவில்லை என்பது உண்மையிலேயே வேதனை.
====

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button