அம்பானி வீட்டு பசுமாட்டின் காலில் வைரச் சங்கிலி – பாலிவுட் நடிகை வெளியிட்ட பரபரப்பு தகவல்!

ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்சன்ட் திருமணம் கடந்த ஆண்டு ஜுலை மாதம் நடைபெற்றது. இதில் உலக பிரபலம் வாய்ந்த ஹாலிவுட் நடிகைகளான கிம் கர்தஷ்யன், அவரது சகோதரி க்ளோ கர்தஷ்யன் ஆகியோர் கலந்து கொண்டனர். அங்கு அவர்கள் பார்த்த சில முக்கிய விசயங்களை தொலைக்காட்சி தொடர் ஒன்றில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். அவர்கள் கூறியுள்ளதாவது, திருமண அரங்கத்தின் சீலிங்கிள்ல இருந்து பல லட்சக்கணக்கான பூக்கள் தொங்க விடப்பட்டு இருந்தன. அங்கு எல்லாமே வைரம் தான். டிஸ்னிலேண்டில் புதிய உலகத்தை உருவாக்குவது போல், நிஜத்தில் உருவாக்கி இருந்தனர்.
மயில் போல் வடிவமைக்கப்பட்ட படகில், மணப்பெண் ராதிகா மெர்சன்ட் மிதந்து வந்தார். அந்த படகு முழுவதும் விலைமதிப்பற்ற ரத்தினங்கள் பூசப்பட்டு இருந்தன. முற்றிலுமாக அந்த படகு தங்க முலாம் பூசப்பட்டு இருந்தது. எஞ்சிய இடங்களை வைரங்கள் நிரப்பின.
ஏன் அவர்கள் கொண்டு வந்த பசு மாடுகளின் கால்களில் கூட வைர சங்கிலிகள் அணிந்து இருந்தனர். அந்த பசுக்களை அவர்கள் வணங்கினர்.திருமணம் பெரிய ஆடம்பரம் என்றாலும், அதற்கு முன்பு சாதாரண மக்களுக்கும் அவர்கள் உதவிகளை செய்தனர்.எங்களுக்கு அம்பானி குடும்பம் நேரடியாக பழக்கம் இல்லை. ஆனால் எங்களது தோழி லோரெய்ன் ஸ்வாட்ஸ் ஒரு நகை வியாபாரி. அவர் தான் அம்பானி குடும்பத்துக்கும் நகைகளை செய்து கொடுக்கிறார்.
அவர் தான் எங்களிடம் வந்து, அம்பானி குடும்ப திருமணத்திற்கு உங்களை என் மூலம் அழைக்கின்றனர் என்று சொன்னார். நாங்களும் எங்களது விருப்பத்தின் பேரில் அதில் கலந்து கொண்டோம்.அவர்கள் அனுப்பிய அழைப்பிதழின் எடை எவ்வளவு தெரியுமா? சுமார் 22 கிலோ எடை இருக்கும். அதனை பார்த்த உடன் பைத்தியக்காரத்தனமாக இருந்தது. இருந்தாலும், அதனை திறந்த போது, அதில் இருந்து இசை வந்தது. எனவே அதனை நிராகரிப்பது தவறு என நினைத்தோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.