தீபக் ராஜா இறுதி ஊர்வலம் – ஸ்தம்பித்த சாலைகள்!

பசுபதி பாண்டியன் ஆதரவாளர் தீபக் ராஜாவின் உடலை 7 நாட்களுக்கு பிறகு, அவரது உறவினர்கள் பெற்றுக் கொண்டனர். இதனையடுத்து பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த அவரது உடல் சொந்த ஊரான வாகைக் குளத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது, இரு சக்கர வாகனங்களில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள், உடலை தொடர்ந்து ஊர்வலமாக வந்தனர். இதனால் சுமார் 10 கிலோ மீட்டரை தாண்டவே 3 மணி நேரத்திற்கு மேல் ஆனது.
இந்த வழக்கு சம்பந்தமாக ஏற்கனவே 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் திருச்சியில், நவீன் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சமூக ரீதியில் பெரும் பதற்றத்தை இந்தச் சம்பவம் ஏற்படுத்தியுள்ளதால், இறுதி ஊர்வலத்திற்கு பாதுகாப்பாக, 300க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.வஜ்ரா வாகனம் வரவழைக்கப்பட்டிருந்தது. தென் மாவட்டங்களை உலுக்கி வரும் சாதிய கொலைகளால், தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுகிறது.