உலகம்வைரல்

ஈரான் அதிபர் மறைவு – இந்தியாவில் ஒரு நாள் துக்கம் அனுசரிக்க மத்திய அரசு அறிவிப்பு!

ஈரான் அதிபர் மறைவு – இந்தியாவில் ஒரு நாள் துக்கம் அனுசரிக்க மத்திய அரசு அறிவிப்பு!
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மறைவையொட்டி, இந்தியாவில் மே 21ஆம் தேதி ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. எனவே அரசு மற்றும் தனியார் இடங்களில் வழக்கமாக நிறுவப்பட்டுள்ள தேசியக் கொடிகள் அரை கம்பத்தில் பறக்க விடப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதே போல், அரசின் சார்பில் மே 21ஆம் தேதி நடைபெற உள்ள அனைத்து பொழுதுபோக்கு சார்ந்த நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா – ஈரான் இடையேயான நட்புணர்வு பல ஆண்டுகளாக நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button