உலகம்

ஆபத்பாண்டவன் ஆனந்த்! யானை, வரிக்குதிரை, காண்டாமிருகங்களை காப்பற்ற தூதூ!

ஆப்ரிக்க நாடான நமீபியாவில், கடும் உணவுப் பஞ்சம் ஏற்பட்டுள்ள நிலையில், அங்குள்ள வன விலங்குகளை கொன்று, அதன் இறைச்சியை மக்களுக்கு வழங்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.யானை, காண்டா மிருகம், வரிக்குதிரை, நீலக் காட்டு மான்கள் உள்ளிட்ட பிற நாடுகளால் பாதுகாக்கப்பட வேண்டிய வன விலங்குகளாக கருதப்படும், 700 விலங்குகளை கொல்ல அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

முதல்கட்டமாக ஏற்கனவே 150 வன விலங்குகள் கொல்லப்பட்டு, அதன் இறைச்சியை மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.இந்நிலையில் விலங்குகளை கொல்ல வேண்டாம் என்றும், அதனை தனது வன்த்தாரா வன உயிரியல் பூங்காவில் வைத்து, வளர்க்க தயாராக உள்ளதாக ஆனந்த் அம்பானி அறிவித்துள்ளார். இதற்காக அவரது அதிகாரிகள், நமீபியா அரசை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.


குஜராத்தில் உள்ள ஆனந்த் அம்பானியின் வன்தாரா வன உயிரியல் பூங்கா 3000 ஏக்கர் பறந்து விரிந்தது. 43 வகையான 2000 ஆயிரம் விலங்குகள் அங்கு வளர்க்கப்படுகின்றன. 2100 ஊழியர்கள் இங்கு வேலை பார்க்கின்றனர்.

இங்கு விலங்குகளுக்கு ஐசியூ, எம்.ஆர்.ஐ. சி.டி. ஸ்கேன், எக்ஸ்ரே, அல்ட்ரா சவுண்ட், எண்டோஸ்கோபி, டெண்டல்ஸ்கேலஸ், லித்தோஸ்டிரிஸ்பி, டையாலிசிஸ், அறுவை சிகிச்சை அரங்கு என இந்தியாவில் எந்த ஒரு விலங்கியல் பூங்காவிலும் இல்லாத வசதிகள் உள்ளன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button