குஜராத்தில் மரண பயத்தை காட்டி வரும் முதலைகள் – வெள்ளம் காரணமாக ஊருக்குள் படையெடுப்பு!

வதோதராவில் அபாய கட்டத்தை எட்டிய விஸ்வமித்ரா ஆறு…
வீட்டு வளர்ப்பு பிராணிகளை வேட்டையாடும் முதலைகள்…
வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்கள் கடும் அச்சம்….
குஜராத்தில் பெய்து வரும் கனமழையால், வதோதரா நகரத்தின் பல இடங்களில் தண்ணீரில் மூழ்கியுள்ள நிலையில், முதலைகள் ஊருக்குள் படையெடுத்து வருகின்றன.
ஒரு வீட்டின் கூரை மீது முதலை ஒன்று படுத்திருக்கும் காட்சிகளை பி.டி.ஐ. செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
விஸ்வமித்ரா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, அந்த ஆற்றில் இருந்து முதலைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்துள்ளன.
நாய் ஒன்றை கொன்று, அதனை வாயால் கவ்வியவாறு, வலம் வந்த முதலையால், மக்கள் அதிர்ச்சியில் உரைந்தனர்.
வெள்ளத்தால் ஏற்கனவே பாதிப்புகளைச் சந்தித்துள்ள மக்களுக்கு முதலைகள் உயிர் பயத்தை காட்டி வருகின்றன. மீட்புப் பணிகளுக்கு ராணுவம் வரவலைக்கப்பட்டு, தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 3 நாட்களில் மட்டும் வெள்ளத்திற்கு 25 பேர் பலியாகியுள்ள நிலையில், சுமார் 20 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
====