உலகம்
காசா இனப்படுகொலையை தடுக்க முடியவில்லையே? மலேசிய பிரதமர் வேதனை!

காசாவில் நிகழும் இனப்படுகொலைகள் நம் கூட்டு மனசாட்சியை சோதிக்கும் செயல் என மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். shangri-la dialogue எனப்படும் ஆசிய நாடுகளின் கூட்டத்தில் பேசிய அவர்
, மிகப்பெரிய பேரழிவு, சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் வெளிப்படையாக மீறப்படுதல், நீதியை நிலைநிறுத்தவேண்டிய நிறுவனங்கள் முடங்கிக் கிடப்பது, ஆகியவை நம் கூட்டு மனசாட்சிக்கு ஏற்பட்ட சோதனையாக உள்ளது. வெறும் அனுதாபம் தெரிவிப்பதை கடந்து உறுதியான, நிலையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.