தமிழ்நாடு

கால்வலி, வாதம் போன்ற பிரச்னைகளில் இருந்து பாதுகாக்கும் களிமண் டைல்ஸ்! 25 ஆண்டுகளை பூர்த்தி செய்த Nuvocotto நிறுவனம்!

பாரம்பரிய களிமண் டைல்கள், மேற்கூரை உற்பத்தியில் சாதனை…
25 ஆண்டுகளை நிறைவு செய்த Nuvocotto நிறுவனம்…
கால்வலி, வாதம் போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு…

சென்னையில் பல பாரம்பரிய கட்டிடங்கள் இன்றும் எந்த சேதமும் அடையாமல் இருப்பதற்கும், பொழிவுடன் காட்சி தருவதற்கும் முக்கிய காரணம் பழமையான கட்டுமான முறைகளாகும். அந்த வகையில், தரைத்தளம், சுவர், மேற்கூரை ஆகியற்றில் களிமண்ணால் செய்யப்பட்ட, டைல்ஸ்கள் பதிக்கப்படுவது, அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

களிமண், தண்ணீர், நெருப்பு மூலம் தயாரிக்கப்படும் இந்த வகை டைல்ஸ்கள், மேற்கூரைகள் பயன்படுத்துபவர்களுக்கு பல நன்மைகளை தருகின்றன. குறிப்பாக குளிர்காலங்களில் டைல்ஸ்களில் வெறும் காலில் நடப்பவர்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. இந்த நிலையில் இந்த களி மண் டைல்ஸ்கள், மிதமான வெப்பத்தை கொடுப்பதால், செருப்பு அணியாமலேயே இருக்க முடிகிறது.

இதே போல, கோடைக்காலங்களில் மொட்டை மாடிகளில் இருந்து இறங்கும் வெப்பம், குடியிருப்பு வாசிகளை படாத பாடு படுத்துகிறது. மழைக் காலங்களில் கான்கீரீட் கட்டிடங்கள் தண்ணீர் கசிவு பிரச்னையையும் எதிர்கொள்கின்றன. இவை அனைத்திற்கும் தீர்வாக, இந்த களிமண் டைல்ஸ்கள் அமைந்துள்ளன.

இந்தக் காரணங்களால் களி மண் டைல்ஸ்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. இந்த தேவையை கடந்த 25 ஆண்டுகளாக பூர்த்தி செய்து வரும் நிறுவனம் தான் Nuvocotto. தமிழ்நாட்டில் கோவை,மதுரை, நகரங்களில் செயல்படும் இந்த நிறுவனம், இந்தியாவின் பிற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் கிளைகளை கொண்டுள்ளது.

தற்போது, 25 ஆண்டுகள் பூர்த்தியாவதையொட்டி, சென்னை அரும்பாக்கத்தில் புதிய கிளை திறக்கப்பட்டது. புதிய கிளையை பேராசிரியர் கிருஷ்னராவ் ஜெய்சிம் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். இதில், நிறுவனத்தின் தலைவர் அனஸ், துணை நிறுவனர் முஹம்மது ரசல், டைரக்டர் அப்துல் அகத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
=====

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button