குழந்தைகளுக்கு எந்த பாதிப்பும் வந்து விடக்கூடாது – பரிசுப் பொருட்களை பார்த்து பார்த்து தேர்வு செய்த மோடி!

பாரிஸில் நடந்த AI உச்சி மாநாட்டின் போது, பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸின் மகன் விவேக்கின் பிறந்தநாளை வான்ஸ்,,, மனைவி உஷா உள்ளிட்ட குடும்பத்தினருடன் கொண்டாடினார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மோடி, சுற்றுச்சூழலுக்கு உகந்த காய்கறி சாயங்களால் செய்யப்பட்ட மர ரயில் பொம்மையை குழந்தை விவேக்குக்கு மோடி பரிசாக வழங்கினார்.ஜே.டி.வான்ஸின் மற்றொரு மகனான இவான் ப்ளெய்ன் வான்ஸுக்கு, கொல்கத்தா காளி கோவில் ஓவியக் கலைஞர்களால் உருவாக்கப்பட்ட காளிகாட் பாட் ஓவியங்கள்,
சந்தால் ஓவியங்கள் மற்றும் மதுபானி ஓவியங்கள் போன்ற இந்திய நாட்டுப்புற ஓவியத் தொகுப்பை வழங்கினார்.
ஜே.டி.வான்ஸின் மகள் மிராபெல் ரோஸ் வான்ஸ்க்கு மரத்தால் ஆன எழுத்துத் தொகுப்பை வழங்கினார்.
இந்த பரிசுகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்தும், இந்தியாவின் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையிலும் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.அமெரிக்க துணை ஜனாதிபதி ஜேடி வான்ஸ் தனது குழந்தைகள் பரிசுகளை மிகவும் ரசித்ததாக குறிப்பிட்டுள்ளார்.இந்த நிகழ்வின் போது மோடியும் வான்ஸும் பல்வேறு விஷயங்களைப் பற்றி விவாதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.