உலகம்

கூகுள் மேப் “ஹேக்”! லெபனானில் இருப்பது போல் காட்டியதால் இஸ்ரேலியர்கள் பீதி! 

ஈரான் தாக்குதல் காரணமாக ஜிபிஎஸ் சிக்னல்களை ஜாம் செய்து வைத்திருந்ததாக இஸ்ரேல் தெரிவித்தது.

மத்திய இஸ்ரேலில் ஜிபிஎஸ் சிஸ்டம் ஹேக் செய்யப்பட்டதால், வாகன ஓட்டிகள் கடும் அச்சம் அடைந்தனர். அவர்கள் லெபனானில் உள்ளது போல் காட்டப்பட்டதால் கடும் பீதி அடைந்தனர்.

முன்னதாக ஈரான் தாக்குதல் காரணமாக ஜிபிஎஸ் சிக்னல்களை ஜாம் செய்து வைத்திருந்ததாக இஸ்ரேல் தெரிவித்தது. தற்போது, ஏற்பட்டுள்ள கோளாறு குறித்து விசாரித்து வருவதாக கூறப்பட்டுள்ளது.

இஸ்ரேல் மீது கடந்த ஏப்ரல் மாதம் ஈரான் நடத்திய தாக்குதல், அமெரிக்காவின் உதவியுடன் முறியடிக்கப்பட்டது. ஆனால் இந்த முறை, அதை விட பலமான தாக்குதலை இஸ்ரேல் நடத்த உள்ளதாக போர் ஆய்வு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த முறை ஈரான் மட்டுமே தாக்குதல் நடத்திய நிலையில், இந்த முறை, பலமுனை தாக்குதல்கள் ஒரே நேரத்தில் நடத்தப்படும் என கூறப்படுகிறது.

கடந்த முறை இஸ்ரேலை எச்சரிக்கும் வகையிலான தாக்குதலை மட்டுமே ஈரான் நடத்தியது. இதனால் இஸ்ரேலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால் இந்த முறை குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தும் தாக்குதல்களை ஈரான் நடத்தும் என தெரிகிறது.

இதனால் அமெரிக்காவின் மத்திய கட்டளை அமைப்பு தளபதி, குரில்லா இஸ்ரேல் விரைந்துள்ளார். ஈரான் கூடிய விரைவில் எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தும் என்பதால் இஸ்ரேலியர்கள் பீதியில் உள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button