இந்தியா

துபாயில் வெறும் ரூ. 30 லட்சம் – இந்தியாவில் ரூ. 2 கோடி!

கார் விலையில் பாதி வரி!

இந்தியாவில் 2 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் லேண்ட் குரூஸர் ஆடம்பர சொகுசு கார் துபாயில் வெறும் 30 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகும் செய்து வைரலாகி வருகிறது.

மிகப்பெரிய வணிகசந்தையான இந்தியாவின் விலை துபாயை விட பல மடங்கு அதிகமாக இருப்பதற்கான காரணங்கள் சிலவற்றை பிரபல முதலீட்டு வங்கியாளர் சர்தக் அஹுஜா விளக்குகிறார்.

இந்தியாவில் 1 கோடிக்கு விற்பனை செய்யப்படும் BMW X5 அமெரிக்காவில் வெறும் 55 லட்சம் ரூபாய் மட்டுமே. அதேபோல இந்தியாவில் 2 கோடிக்கு விற்பனை செய்யப்படும் லேண்ட் குரூஸர் துபாயில் 30 லட்சம் ரூபாயாக உள்ளது. இவ்விலை வித்தியாசம் பிரமிக்க வைப்பதாக அஹுஜா கூறுகிறார்.

இவ்வித்தியாசங்களுக்கான முக்கிய காரணமாக இந்தியாவின் வரி விதிப்புகளை குறிப்பிடுகிறார்.

நம்முடைய நாட்டில் ஆடம்பர கார்களுக்கான இறக்குமதி வரிகள் 60% முதல் 100% ஆக உள்ளது. மேலும் இதனுடன் ஜிஎஸ்டி 28% விதிக்கப்படுகிறது. பின்னர் செஸ் மற்றும் மாநில சாலை வரிகள் உள்ளிட்டவை கூடுதலாக அடங்குகின்றன. காரின் ஆன் ரோடு விலையில் ஏறத்தாழ 45% வரிக்காக மட்டுமே ஒதுக்க வேண்டியுள்ளது.

ஆனால் இதற்கு நேர்மாறாக துபாயில் மிக குறைந்த அளவே இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. வரி மட்டுமின்றி உள்நாட்டின் தேவை , போக்குவரத்து செலவுகள், மொத்தமாக ஆர்டர் செய்தல் போன்ற காரணிகளும் விலை மாற்றங்களில் குறிப்பிட்ட தாக்கங்களை ஏற்படுத்துவதாக அஹுஜா விளக்குகிறார்.

இருப்பினும் கார் வாங்க முடிவு செய்தவர்கள் மாருதி , டாடா அல்லது ஹூண்டாய் போன்ற நிறுவனங்களை தேர்வு செய்ய பரிந்துரைக்கிறார்.  ஏனெனில் அவை இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன. மேற்கண்ட காரணிகளுக்குள் அடங்காது. ஆகையால் இந்தியாவில் வாங்குவது நல்லது அவற்றின் விலைகள் உலகளவில் போட்டித் தன்மை வாய்ந்தவையாக உள்ளதாக குறிப்பிடுகிறார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button