பிரிட்டன் தேர்தல் – எம்.பிக்களாக வெற்றி பெற்ற பாலஸ்தீன் ஆதரவு தலைவர்கள்!

பிரிட்டன் தேர்தலில் காசா மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த 4 முக்கியத் தலைவர்கள் வெற்றி…
எதிர் கட்சி ஆதரவு அலையை முறியடித்த காசா ஆதரவாளர்கள்….
தங்கள் வெற்றியை பாலஸ்தீனியர்களுக்கு சமர்பிப்பதாக அறிவிப்பு…
பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலில் ரிஷி சுனக் தலைமையிலான பழமைவாதக் கட்சியை வீழ்த்தி, எதிர்கட்சியான லேபர் கட்சி மாபெரும் பெற்றுள்ளது. எதிர்கட்சிக்கு ஆதரவான அலை பிரிட்டன் முழுவதும் சுழன்றாலும், பாலஸ்தீன ஆதரவு தலைவர்களை அந்த அலை எதுவும் செய்ய முடியவில்லை.
காசா போர் தொடங்கியது முதலே, அதனை எதிர்த்து பிரிட்டனில் மாபெரும் போராட்டங்கள் நடைபெற்றன. அதனை பிரிட்டனின் எதிர்கட்சியான லேபர் கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர்கள் ஆதரித்தனர். ஆனால் கட்சித் தலைவர் கீர் ஸ்டார்மர் இஸ்ரேலுக்கு ஆதரவான கருத்துக்களை கூறி வந்தார். இதனால் பாலஸ்தீன் ஆதரவாளர்கள் பலர் அக்கட்சியில் இருந்து விலகி தனித்து, சுயேட்சையாக போட்டியிட முடிவு செய்தனர்.
இதே போல், தற்போது ஆட்சியை பிடித்துள்ள லேபர் கட்சியின் முன்னாள் தலைவரான Jeremy Corbyn
தொடர்ந்து காசா மக்களுக்கு ஆதரவாகவும், இஸ்ரேலை கடுமையாக கண்டித்தும் பேசி வந்தார். மேலும் லேபர் கட்சியின் தலைமை இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்பட்டதை கண்டித்தும் வந்தார். இந்நிலையில், அவரும் இந்தத் தேர்தலில் Islington North தொகுதியில் தனித்து போட்டியிட்டு வென்றுள்ளார்.
இதே போல, Leicester South தொகுதியில் லேபர் கட்சியில் இருந்து விலகிய Shockat Adam சுயேட்சையாக போட்டியிட்டு வென்றுள்ளார். இந்த வெற்றியை பாலஸ்தீனியர்களுக்கு சமர்பிப்பதாக Shockat Adam தெரிவித்துள்ளார்.
Birmingham Perry Barr தொகுதியில் போட்டியிட்ட லேபர் முன்னாள் தலைவர் Ayoub Khan வென்றுள்ளார்.
Blackburn தொகுதியில் Adnan Hussain வென்றுள்ளார். Dewsbury and Batley தொகுதியில் Iqbal Mohamed வென்றுள்ளார்.இவர்கள் அனைவரும் லேபர் கட்சியின் இஸ்ரேல் ஆதரவு போக்கை கண்டித்து அதில் இருந்து விலகி தனித்துப் போட்டியிட்டு வென்றவர்கள் ஆவர்.
தொடர்ந்து பிரிட்டனில் நடைபெற்ற இஸ்ரேல் எதிர்ப்பு போராட்டங்களை முன் நின்று நடத்தியவர்கள்.
இதன் மூலம் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் மீண்டும் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவான குரல் ஓங்கி ஒலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
=====