வரலாறு காணாத உச்சத்தில் பிட்காயின்… இன்றைய விலை நிலவரம் என்ன?
அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றதையடுத்து, கிரிப்டோ கரன்சியின் மதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது. 89,623 டாலராக இருந்த கிரிப்டோ கரன்சி, இன்று காலை நிலவரப்படி, 89,599 ஆக உயர்ந்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆரம்பம் முதலே கிரிப்டோ கரன்சிக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார். மேலும் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது கூட, அமெரிக்காவில் பிட்காயின் பயன்பாடு ஊக்குவிக்கப்படும். மேலும் அமெரிக்கா கிரிப்டோ தலைநகராக மாற்றப்படும் என அறிவித்தார்.
உலகின் வல்லரசு நாடாக கருதப்படும் அமெரிக்காவிற்கு அதிபராக வரக்கூடியவர் அளித்த இந்த வாக்குறுதிகள் ஏராளமான முதலீட்டாளர்களை டிஜிட்டல் கரன்சி பக்கம் திரும்பியுள்ளது. தற்போது 47வது அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்க உள்ளதால், இவரது ஆட்சியில் டிஜிட்டல் கரன்சியாக கிரிப்டோ கரன்சிக்கு அங்கீகாரம் கிடைக்ககூடும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது. இதனால் கிரிப்டோகரன்சியின் மதிப்பு கிடுகிடுவென புதிய உச்சங்களை எட்டி வருகிறது.
கிரிப்டோ கரன்சியின் தற்போதைய எழுச்சியைக் கண்டு நிதி வல்லுநர்கள் ஆச்சர்யம் அடைந்துள்ளனர். இது தொடர்ந்தால், இந்த ஆண்டு இறுதிக்குள் பிட்காயின் 1,00,000 டாலர்களை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க அதிபராக டிரம்ப் வெற்றி அறிவிக்கப்பட்ட முதல் நாளே கிரிப்டோ கரன்சியின் மதிப்பு யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு 80,000 டாலர்களைக் கடந்தது குறிப்பிடத்தக்கது.