இந்தியா

200 கோடி ரூபாய் சொத்தை தானமாக வழங்கிவிட்டு, பிச்சை எடுக்கும் கோடீஸ்வரஸ்? ஏன்?

200 கோடி ரூபாய் சொத்துக்களை தானம் செய்த வைர வியாபாரி…
மனைவி, பிள்ளைகளுடன் பிச்சை எடுத்து வாழ்க்கை…
மத நம்பிக்கையின் ஒரு பகுதியாக விசித்திர முடிவு…

குஜராத் மாநிலம் ஹிம்மத் நகரை சேர்ந்த பவேஷ் பண்டாரி என்பவர் அந்த நகரின் பெரிய தொழிலதிபர்களின் ஒருவராக திகழ்ந்துள்ளார்,. இவர் தனது குடும்பத்தோடு ஜெயின் மதத்தை பின்பற்றியும் வந்துள்ளார்.
கடந்த 2022-ம் ஆண்டு இவரின் 19 வயது மகளும், 16 வயது மகனும் தங்களின் சுகவாழ்வை துறந்து துறவற வாழ்க்கையை மேற்கொண்டனர். தங்கள் குழந்தைகளின் இந்த முடிவுக்கு சம்மதம் தெரிவித்த பவேஷ் பண்டாரி தற்போது தனது மனைவியுடன் தானும் துறவுறம் செல்வதாக அறிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து தன்னிடமிருந்து 200 கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துக்களை தானமாக வழங்கியுள்ளார்.
இப்படி துறவுறம் செல்பவர்கள் யாசகம் பெற்று அதாவ பிச்சை எடுத்து அதன் மூலம் கிடைக்கும் உணவை உண்டே உயிர்வாழ வேண்டும் என்பது கொள்கையாகும்.
அவர்களிடம் சொந்தமாக இரண்டு வெள்ளை ஆடைகள், யாசகம் செய்ய கிண்ணம் , பூச்சிகளை அப்புறப்படுத்த ஒரு துடைப்பம் ஆகியவை மட்டுமே இருக்க வேண்டும் என்பது கட்டாயமாகும்.
இந்தச் செய்தி தற்போது, பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

monkhood: ரூ.200 கோடி சொத்து; தானம் செய்துவிட்டு துறவறம் மேற்கொள்ளும் தம்பதி! - காரணம் என்ன? | Gujarat Businessman, Wife Donate ₹ 200 Crore Wealth To Become Monks - Vikatanஇந்தியாவில் உருவான முக்கிய மதங்களில் ஒன்று சமண மதம். ஜெய்னிஸம் என்று அழைக்கப்படும் இந்த மதம் ஒருகாலத்தில் இந்தியா முழுக்க பரவியிருந்தது.
பழங்கால தமிழக வரலாற்றில் மணிமேகலை, சிலப்பதிகாரம் , சீவகசிந்தாமணி போன்ற மிகச்சிறந்த நூற்கள் எல்லாம் சமண மதத்தை சேர்ந்த நூற்கள்தான்.
சமணம் என்று அழைக்கப்படும் ஜெயின் மதம் தமிழ்நாட்டில் இருந்து காணாமல் போக அதன் துறவுறமே முக்கிய காரணமாக தமிழ் அறிஞர்களால் கூறப்படுகிறது.

சொத்து,சுகம் , குடும்பம் என அனைத்தையும் துறந்து துறவுரம் செல்வது ஜெயின் மதத்தின் முக்கிய அங்கமாக திகழ்கிறது. இந்தியாவில் தற்போதும் ஜெயின் மதத்தை பின்பற்றுபவர்கள் துரவுறத்தை தொடர்ந்து பின்பற்றி வருகின்றனர்.
அந்த வகையில் தான் தற்போது வசதியான ஜெயின் தம்பதிகள் தங்களின் 200 கோடி சொத்துக்களை நன்கொடையாக அளித்துவிட்டு துறவுறத்தை மேற்கொண்டுள்ளது ஊடகங்களில் முக்கிய செய்தியாக வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு, குஜராத்தில் பல கோடி ரூபாய் சொத்துக்களை கொண்ட வைர வியாபாரியின் 12 வயது மகள் துறவறத்தை மேற்கொண்ட செய்தி இந்தியாவையே உலுக்கியது. அதனைத் தொடர்ந்து இந்த செய்தியும் வெளியாகி பெரும் பரபரப்பையே ஏற்படுத்தியுள்ளது.
இப்படி துறவுறம் மேற்கொள்ளும் சிலர் சிறிது காலத்திலேயே துறவை கைவிட்டுள்ள நிகழ்வும் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

========

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button