சினிமா

படம் வெளியாவதற்கு முன்பே ரூ. 1000 கோடி வர்த்தகம்! புதிய சாதனை படைத்த புஷ்பா 2

வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ள ஒரு இந்திய திரைப்படம் வெளியாவதற்கு 4 மாதம் உள்ள நிலையில், தற்போதே 1000 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளது என்றால் அதனை உங்களால் நம்ப முடிகிறதா? நம்பமுடியாவிட்டாலும் அதுதான் உண்மை. வாருங்கள் அது பற்றி பார்ப்போம்

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஒரு திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்கிறது என்றால் அது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்பட்டது. ஆனால், கடந்த சில ஆண்டுகளில் 100 கோடி ரூபாய் வசூல் என்பது சாதாரணமாக மாறிவிட்டது என்பதே உண்மை. அதிலும் கடந்த 5 ஆண்டுகளில் 100 கோடி ரூபாய் வசூலை கடந்த படங்களை பட்டியலிட்டால் அதுவே மிக பெரிதாக இருக்கும்.

2016-ம் ஆண்டு அமீர்கான் நடிப்பில் வெளியான தங்கல் திரைப்படம் உலகளவில் 1000 கோடி ரூபாயை வசூல் செய்து 1000 கோடி வசூல் செய்த முதல் இந்திய திரைப்படம் என்ற சாதனையை படைத்தது. அடுத்து வந்த பாகுபலி 2 திரைப்படம் இந்தியாவில் மட்டுமே 1000 கோடியை வசூல் செய்துள்ளது. இத்தகைய வெற்றி காரணமாக தற்போது 100 கோடி ரூபாய் வசூல் என்பது சாதாரண செய்தியாக மாறிவிட்டது.

Pushpa 2-The Rule' set to create history on August 15th, 2024 | Pragativadi | Odisha News, Breaking News Odisha, Latest Odisha Newsஇந்த நிலையில் ஒரு திரைப்படம் திரையில் வெளியாகும் முன்பே 1000 கோடிக்கு வியாபாரம் ஆகியுள்ளது என்ற செய்தி திரைத்துறையையே உலுக்கியுள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் பான் இந்தியா படமாக வெளியான புஷ்பா திரைப்படம் இந்திய அளவில் பெரும் வெற்றியைப் பெற்றது. தெலுங்கு திரையுலகைத் தாண்டி வடஇந்தியாவிலும் இந்த திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. இதனால் இந்த திரைப்படம் சுமார் 400 கோடி அளவுக்கு வசூல் செய்தது.

அடுத்ததாக புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாகுபலி படத்தை போல இந்த படத்தின் இரண்டாம் பாகத்துக்கும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்துக்கான வியாபாரம் தற்போதே தொடங்கியுள்ளது.

500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மட்டும் 200 கோடிக்கு படத்தின் முன் வெளியீட்டு உரிமை கோரப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் இந்தி வெளியீட்டுக்கான உரிமையும் பல நூறு கோடிக்கு விற்கப்படவுள்ளதாகவும், மொத்தமாக உலகளவில் தற்போதே 1000 கோடிக்கும் அதிகமாக வியாபாரம் ஆகியுள்ளதாக பிரபல நாளிதழான இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

படத்துக்கு இந்த அளவு வரவேற்பு இருக்கும் நிலையில், புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் திரைப்படம் வெளியானால் அது பாகுபலி படத்தின் வசூலை முடியடிக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
=============

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button