அரசியல்

ஜெகன் மீது கொலை முயற்சி வழக்கு – கைதாக வாய்ப்பு! ஆந்திராவில் பதற்றம்!

ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி மீது, தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏ கொடுத்த புகாரையடுத்து, கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் ஆந்திராவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டு, ஆந்திர போலீசார் தன்னை கைது செய்து, கடும் சித்ரவதைகளை செய்ததாக, தெலுங்கு தேசம் கட்சியின் எம்எல்ஏ TRIPLE R என அழைக்கப்படும் ரகு ராம கிருஷ்ணா ராஜு காவல்துறையில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில், அப்போதைய முதலமைச்சர் ஜெகன் மோகன் உத்தரவின் பேரில், காவல்துறை இயக்குநர், கூடுதல் எஸ்.பி. உள்ளிட்ட அதிகாரிகள் தலைமையிலான போலீசார், தன்னை அடித்து சித்ரவதை செய்து, கொலை செய்ய முயற்சித்ததாக கூறியுள்ளார்.

தன்னை நெஞ்சில் மிதித்து, மூச்சுத் திணறல் ஏற்படச் செய்ததாகவும், தனது மொபைல் போன் பாஸ்பேர்ட் கேட்டு, அடித்து துன்புறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். தான் ஒரு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என்று கூட பார்க்காமல், கடும் வன்முறைகளை தன்மீது கட்டவிழ்த்து விடப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் ஆந்திராவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து, போலீசார், ஜெகன் மோகன் ரெட்டி, 4 காவல்துறை உயர் அதிகாரிகள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்திய தண்டனைச் சட்ட பிரிவுகள் 120 b, 166, 167, 197, 307, 326, 465, 506 r/w 34 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனால் ஆந்திராவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சந்திரபாபு நாயுடுவை, ஜெகன்மோகன் கைது செய்ததது போன்று, தற்போது, ஜெகன் கைதாவாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளனர். இதனால் ஆந்திராவில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
====

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button