கிறிஸ்தவ நகரம் மீது தாக்குதல்

லெபனானில் உள்ள அய்டு என்ற நகரத்தில் மரனைட் கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். இங்குள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பின் மீது இஸ்ரேல் நடத்திய வான் வழித் தாக்குதலில், 21 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 8 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த கிராமத்தில் ஹிஸ்புல்லா அமைப்பு இல்லை என்றும் லெபனான் ராணுவம் தான் பாதுகாப்பு பணியில் உள்ளதாக நகர மேயர் ஜோசப் டிராட் கூறியுள்ளார்.தாக்கப்பட்ட கட்டிடத்தில், புலம்பெயர்ந்த மக்கள் தங்கி இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். இதனை ஒரு இனப்படுகொலை என லெபனான் அரசு வரையறுத்துள்ளது.
இதனிடையே இந்த தாக்குதலுக்கு பதிலடியாக, டெல் அவிவில் உள்ள வர்த்தக கட்டிடங்களை குறிவைத்து, ஹிஸ்புல்லா 3 ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதாக தி கார்டியன் பத்திரிக்கை குறிப்பிட்டுள்ளது.முன்னதாக இந்த நகரம் மீதான தாக்குதலுக்கு பதிலடியாக, இஸ்ரேல் படைகளின் 3 டாங்கிகளை ஹிஸ்புல்லா தகர்த்ததாகவும், அவை தீப்பற்றி எரிந்ததால், இஸ்ரேல் தரப்பில் உயிரிழப்பு மற்றும் காயங்கள் ஏற்பட்டிருக்கலாம் என லெபனானின் அல் மயாதீன் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.