மு.க.ஸ்டாலினின் வெற்றியை தீர்மானித்தவர் ஆம்ஸ்ட்ராங்!

2011 கொளத்தூர் சட்டப்பேரவைத் தேர்தல்…
மு.க.ஸ்டாலினின் வெற்றியை தீர்மனித்த ஆம்ஸ்ட்ராங்…
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், 2006 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி உறுப்பினராக இருந்தவர். அவர் 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டார்.
அந்த தொகுதி அப்போது, ஸ்டார் அந்தஸ்து பெற்றிருந்தது. காரணம் மு.க.ஸ்டாலின், அங்கு போட்டியிட்டார். அப்போது திமுக ஆட்சியில் இருந்தது.
அதிமுக சார்பில் சைதை துரைசாமி போட்டியிட்டார். இருவர் இடையே கடும் போட்டி நிலவியது. வாக்கு எண்ணிக்கையின் போது, மு.க.ஸ்டாலின் 68,677 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
அதிமுகவின் சைதை துரைசாமி 65,943 வாக்குகள் பெற்றார். இருவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 2734 மட்டுமே.
அதே நேரம் பகுஜன் சமாஜ் சார்பில் போட்டியிட்ட ஆம்ஸ்ட்ராங், 4004 வாக்குகள் பெற்றார். இதன் மூலம் அந்த தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் நபராக ஆம்ஸ்ட்ராங் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
=====