ஓரு கல்யாணத்தையே நடத்தும் செலவில், கல்யாண பத்திரிக்கை! ஆடம்பரத்தின் உச்சத்தில் அம்பானி குடும்பம்!

ஒரு கல்யாணத்தையே நடத்தி முடிக்கும் செலவில், ஒரே ஒரு கல்யாண பத்திரிக்கை…
தங்கம், வெள்ளி தகடுகள் கொண்டு தயாரிக்கப்பட்ட அம்பானி குடும்ப கல்யாண பத்திரிக்கை…
ரிலையன்ஸ் ஜியோ அதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் ஜூலை 12 ஆம் தேதி மும்பையில் நடைபெறுகிறது. இதற்கு முன்பாகவே, குஜராத்தின், ஜாம்பஜாரில் ஒரு பிரமாண்ட விழாவும், இத்தாலி க்ரூஸ் கப்பலில் மற்றொரு பிரமாண்ட நிகழ்ச்சியும் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் நடத்தி முடிக்கப்பட்டன.
இந்நிலையில் இவர்களின் கல்யாண பத்திரிக்கை பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. கல்யாண பத்திரிக்கையை பெட்டி வடிவில் தயாரித்து அனுப்பியுள்ளனர்.
பெட்டியைத் திறந்ததும் பின்னணியில் இந்தி மந்திரங்கள் ஒலிக்கின்றன. அதில் சில தங்கச் சிலைகளும் இருப்பது போல் தெரியவந்துள்ளது. ஒரு பகுதியில் வெள்ளிக் கோயில் மற்றும் பின்னணியில் மந்திரங்கள் ஒலிக்கின்றன. மற்றொன்றில், பழங்கால கோயிலின் பிரதான வாயிலைப் போன்று தயாரிக்கப்பட்டுள்ளது.
கணேஷ், விஷ்ணு, லட்சுமி, ராதா- கிருஷ்ணா மற்றும் துர்கா தேவி உட்பட பல இந்து கடவுள்களின் விவரங்கள் மற்றும் படங்கள் உள்ளன.
மூன்றாவது அழைப்பிதழில், வெள்ளியில், விஷ்ணுவின் உருவம் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து, கலவையான விமர்சனங்கள் வரத் தொடங்கியுள்ளன.
வழக்கம் போல் பலர் இதனை பார்த்து வியந்து பாராட்டி வருகின்றனர். அதே நேரம் சிலர் இந்திய பொருளாதாரம், வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வோடு, இந்த ஆடம்பர திருமணத்தை தொடர்பு படுத்தி பேசி வருகின்றனர்.
இந்த அழைப்பிதழில் தங்க கட்டிகள் வைக்கப்பட்டு, பரிசளிக்கப்பட்டிருந்தாலும் கூட ஆச்சர்யப்படுவதற்கில்லை என ஒரு சமூக வலைதள பயனர் தெரிவித்துள்ளார்.
தனது திருமணத்திற்கு ஒட்டுமொத்தமாக ஆகும் செலவை, ஒரே ஒரு திருமண பத்திரிக்கைக்காக அம்பானி குடும்பம் செலவு செய்துள்ளது என ஒரு பயனர் தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.
====