“உங்கள் கார்கள் ஒரு குப்பை” விமர்சித்த நெட்டிசன் – ஆனந்த் மகேந்திராவின் உணர்வுபூர்வ பதில்!

உங்கள் நிறுவன கார்கள் ஒரு குப்பை, விரைவில் காணாமல் போவீர்கள் என விமர்சித்த நெட்டிசன் இன்னும் 100 ஆண்டுகள் இருப்போம் என பதிலடி கொடுத்த ஆனந்த் மகேந்திரா…
டுவிட்டர் தளத்தில் எப்போதும் ஆக்டிவ்வாக இருப்பவர் ஆனந்த் மகேந்திரா என்பது நமக்கு தெரியும்.இந்த நிலைல, 7.50 லட்சம் ரூபாய்க்கு மகேந்திரா நிறுவனம் ஒரு புதிய எஸ்யூவி காரை அறிமுகம் செஞ்சு இருக்காங்க அந்த காருடைய விளம்பரத்த ஆனந்த் மகேந்திரா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில வெளியிட்டாரு
இத பார்த்த ஒரு நெட்டிசன், நொட்ட சொல்ல ஆரம்பிச்சாரு… அதாவது,
உங்கள் கார்கள் ஜப்பானியர்கள் அல்லது அமெரிக்கர்கள், அவர்களுடைய நாட்டில தயாரிக்கிற கார்களுடன் போட்டி போட முடியுமா?
வெளிநாட்டில இருந்து அந்த கார்களை இறக்குமதி செய்யிறதுக்கு நிறைய விதிகள் இருப்பதால அவர்களாள இங்க வர முடியல. அதுவரை நீங்க நல்லா அனுபவிச்சுங்கோங்க… இந்த மாதிரி குறைவான விலைல கார்கள் தயாரிக்கிறதால, உங்கள் நிறுவனம் விரைவில் காணாமல் போகும்… குப்பை கார்கள்…
என பதிவிட்டு இருந்தாரு…
இத பார்த்து பலரும் முகம் சுழித்த நிலைல, ஆனந்த் மகேந்திரா ரொம்ப கூலா பதில் சொல்லி இருக்காரு அது என்னனு பார்க்கலாம்.
நண்பரே எங்கள் மீது நீங்கள் நம்பிக்கை வைக்காமல் ஏரளமாக பேசுவதற்கு நன்றி.
இது போன்ற வார்த்தைகள் தான் எங்கள் உள்ளத்தில் நெருப்பை பற்றவைத்து, இன்னும் வேகமாக செயல்பட வைக்கும்.
இந்த நிறுவனத்தில் நான் இணையும் போது, பலரும் இப்படித் தான் பேசினார்கள்.
இந்த தொழிலை விட்டே வெளியேறுமாறு எங்களுக்கு அறிவுரை கூறினார்கள்.
டெயோட்டோ உள்ளிட்ட உலக பெரு நிறுவனங்கள் இந்தியாவிற்குள் வந்த போதும், எங்களை நோக்கி இதையே கூறினார்கள்.
ஆனால் நாங்கள் இன்னும் உயிர்ப்புடன் தான் உள்ளோம். எங்களுக்கு ஒவ்வொரு நாளும் ஒரு போராட்டம் தான். நாங்கள் அதனை ரசிக்கிறோம். இன்னும் 100 வருடங்கள் நாங்கள் தொடர்ந்து இருப்போம். உங்கள் மனதை வெல்ல போராடுவோம்.
இவ்வாறு ஆனந்த் மகேந்திரா அந்த நெட்டிசனுக்கு அழகான பதிலடியை கொடுத்துள்ளார்.