உலகம்

ஆனந்த் அம்பானி கைவசம் ரூ. 250 கோடி மதிப்புள்ள வாட்சுகள்! கைக் கடிகாரத்தின் மீது அதீத ஆர்வம்!

விலை உயர்ந்த வாட்சுகள் மீது அதீத ஆர்வம்…
கோடிக்கணக்கான ரூபாய் கொடுத்து கைக் கடிகாரங்களை வாங்கிக் குவிக்கும் ஆனந்த் அம்பானி…
அவரிடம் உள்ள கடிகாரங்களின் மதிப்பு மட்டும் 250 கோடி ரூபாய் எனத் தகவல்…

தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி ஒரு கைக் கடிகார பைத்தியம் எனத் தெரியவந்துள்ளது. அவர் தனது திருமணத்தின் போது மட்டும் 54 கோடி ரூபாய் மதிப்புள்ள பிரபல சுவிஸ் நிறுவனமான Richard Mille யின் வாட்சை அணிந்திருந்தார்.

இது பெரும் கவனம் பெற்ற நிலையில், தற்போது, அவரது திருமணத்தில் துணை மாப்பிள்ளைகளாக பங்கேற்ற 25 பேருக்கு தலா 2 கோடி வீதம், 50 கோடி ரூபாய் மதிப்புள்ள வாட்சுகளை பரிசாக வழங்கியுள்ளார். வாட்சை பரிசாக வழங்கியதற்கு முக்கிய காரணம், ஆனந்த் அம்பானி வாட்ச் மேல் பைத்தியமாக இருப்பவர் என கூறப்படுகிறது.

உலகில் உள்ள பல்வேறு நிறுவனங்களின் வாட்சுகளை அவர் தொடர்ந்து வாங்கிக் குவித்து வருகிறாராம். அவர் தனது அறையில் வைத்திருக்கும் வாட்சுகளின் மதிப்பு மட்டும் 250 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.

இதில் சோகம் என்னவென்றால், இந்த எல்லா வாட்சுகளும் ஒரே நேரத்தைத் தான் காட்டப்போகின்றன. அது மட்டுமல்ல, சந்தையில் 200 ரூபாய்க்கு வாங்கும் வாட்சுகளும் அதே நேரத்தை தான் காட்டப்போகின்றன.

பிறகு ஏன் இவ்வளவு விலை என்றால், அந்த வாட்சுகளில் பல விதமான நவ ரத்தினங்கள் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
====

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button