உலகம்

செங்கடலில் தோற்று விட்டோம் – அமெரிக்க பத்திரிக்கை புளூம்பெர்க்!

ஏமன் படைகளிடம் அமெரிக்கா தோற்று விட்டது…
புளூம்பெர்க் பத்திரிக்கை வெளியிட்டுள்ள கட்டுரை…

அமெரிக்காவின் பிரபல பொருளாதார பத்திரிக்கையான புளூபெர்க்கில் பத்திரிக்கையாளர் ஹால் பிராண்ட் எழுதியுள்ள கட்டுரையில், அவர் கூறியுள்ளதாவது,
மத்திய கிழக்கில் கடந்த ஓராண்டாக நிறைய அதிர்ச்சிகளை சந்தித்து வருகிறோம். ஹோலோகாஸ்டுக்கு பிறகு, யூதர்கள் அக்டோபர் 7 ஆம் தேதி மிகப்பெரிய தாக்குதலை ஹமாஸ் மூலம் சந்தித்தனர். ஹமாஸ் – இஸ்ரேல் விரைவில் முடியும் என ஆரம்பத்தில் நாம் நினைத்தோம். ஆனால் நீண்டு கொண்டே சென்று வருகிறது.

ஈரான் வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய தாக்குதலை இஸ்ரேல் மீது நடத்தியது. அது அமெரிக்க கூட்டணி அரபு நாடுகளால் முறியடிக்கப்பட்டு விட்டது.
ஆனால் தற்போது அமெரிக்கா உருவாக்கி வைத்துள்ள, WORLD ORDER ஐ சீர்குலைக்கும் நடவடிக்கை தொடங்கிவிட்டது. அமெரிக்கர்கள் இதுவரை கேள்விப்படாத பெயர் ஹவுத்திக்கள். செங்கடலில் அமெரிக்காவுக்கு இருந்த சுதந்திரத்தை பறித்துள்ளனர். உலக சூப்பர் பவரை, போகிற போக்கில் தோல்வியடைய வைத்துள்ளனர்.

இவர்களை ஒடுக்க கடந்த ஜனவரியில் அமெரிக்கா Operation Prosperity Guardian என்ற பெயரில் ராணுவ நடவடிக்கையை தொடங்கியது. இந்த நடவடிக்கைகள் எதிர்பார்த்த பலனை கொடுக்கவில்லை. சூயஸ் கணவாய் போக்குவரத்தை 50 சதவீதம் குறைத்து, எகிப்து நாட்டிற்கு கடும் சுங்க கட்டண இழப்பை ஏற்படுத்தியுள்ளனர். இஸ்ரேல் ஈழட் துறைமுகம் திவால் அடைந்து மூடப்பட்டுள்ளது.
ஹவுத்திக்களின் மீது அமெரிக்க கடும் தாக்குதல் நடத்தியும், ஒரு வருடம் ஆகியும் அவர்களின் தாக்குதல் திறன் குறையவில்லை.

சீன கப்பல்களை அவர்கள் தாக்குவதில்லை. ரஷ்யா அவர்களுக்கு நேரடியாக உதவுகிறது. ஈரான் அவர்களுக்கு ஆயுதம் வழங்குவதோடு, ஆயுதம் தயாரிக்கவும் கற்றுக் கொடுத்துள்ளது.
பல காரணங்களால் அமெரிக்காவால் தற்போது, ஏமன் படைகள் மீது முழு அளவிலான போரை தொடுக்க முடியாது. தற்போது, வரை அமெரிக்கா இந்த போரில் தோல்வியை சந்தித்து வருகிறது. அமெரிக்காவின் அதிபராக யார் வந்தாலும், அவர்கள் இதனை உணர வேண்டும். இவ்வாறு அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


===========

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button