உலகம்

கத்தாரில் உள்ள அமெரிக்க தளம் மீது ஈரான் நடத்தியுள்ள தாக்குதல், ஒட்டுமொத்த மன்னர் ஆட்சி நாடுகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஈரான் உட்பட பிற வெளிநாட்டு சக்திகளிடம் இருந்து தங்களை காத்துக் கொள்வதற்காக, அரபு மன்னர் ஆட்சி நாடுகள் அமெரிக்காவுடன் நெருங்கிய நட்புணர்வுடன் இருந்து வருகின்றனர்.

தங்கள் நாட்டில் போதிய ராணுவ வீரர்கள் இல்லாவிட்டாலும், விலை உயர்ந்த அதி நவீன ஆயுதங்களை வாங்கி குவித்துள்ளனர்.
இவை அத்தனையும் இருந்தும், தற்போது, கத்தாரில் உள்ள ராணுவ தளம் மீது ஈரான் வெற்றிகரமாக தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த தாக்குதல் குறித்து, பல மணி நேரத்திற்கு முன்பே, ஈரான், கத்தார் அதிகாரிகளுக்கு தெரிவித்து, உயிரிழப்புகளை தவிர்க்குமாறு செய்துள்ளது.

இதனால் தாக்குதல் நடைபெற்ற இடத்தில் யாரும் இல்லை. அதே நேரம் ஈரானின் அனைத்து ராக்கெட்டுகளையும் கத்தாரின் அதி நவீன அமெரிக்க, வான் பாதுகாப்பு அமைப்புக்களால் தடுக்க முடியவில்லை. ஒரு ஈரானிய ஏவுகணை வெற்றிகரமாக அபு உதைத் தளத்தை தாக்கியுள்ளது.

இது ஈரானின் அடையாள நடவடிக்கை என்றாலும், தங்களால் அமெரிக்க தளங்களை எத்தகைய தடைகளையும் முறியடித்து தாக்க முடியும் என ஈரான் நிரூபித்துள்ளது.
இந்த தாக்குதல் கத்தாரில் உள்ள இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பலர் இதுபோன்ற போர்களை இதுவரை செய்திகளில் மட்டுமே கேள்விப் பட்டவர்கள்.

இந்நிலையில் ஈரான் நினைத்தால், சவுதி, அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் உள்ள தளங்களையும் தாக்கி இருக்க முடியும். எனவே அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுக்கவே இந்த தாக்குதலை ஈரான் நடத்தியுள்ளது. இந்த அடையாளத் தாக்குதலுக்கு அலறியுள்ளன. அரபு மன்னர் நாடுகள். அமெரிக்காவுக்கு அவர்கள் கொடுத்த அழுத்தம் காரணமாகவே உடனடி போர் நிறுத்த அறிவிப்பை டிரம்ப் வெளியிட்டுள்ளார். இதே போன்ற அழுத்தத்தை இந்த அரபு நாடுகள், காசா விசயத்தில் ஏன் செய்யவில்லை என்பதே அனைவரின் கேள்வி.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button