உலகம்

மத்திய கிழக்கில் அமெரிக்க போர்களுக்கு எவ்வளவு செலவு செஞ்சியிருக்கு தெரியுமா?

 

99,70,000 லட்சம் செலவு…45 லட்சம் மக்களை கொன்று குவித்த அமெரிக்கா…மத்திய கிழக்கு, ஆப்கானிஸ்தானில் அலறிய உயிர்கள்..

.

 

 

உலகிலேயே ராணுவத்திற்காக அதிக தொகை செலவிடும் நாடாக அமெரிக்க உள்ளது. சீனாவை விட 3 மடங்கும், ரஷ்யாவை விட 7 மடங்கும் செலவிடுகிறது.

 

2024 ஆம் ஆண்டில், அமெரிக்கா தனது இராணுவத்திற்காக 997 பில்லியன் டாலர்களை செலவிட்டுள்ளது. இது உலகளாவிய ராணுவ செலவினங்களில் 37 சதவீதமாகும் என ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

குறிப்பாக ஈரான் மீதான தாக்குதலுக்காக மட்டும் யாருமே யோசிக்க முடியாத அளவிற்கு அமெரிக்கா செலவிட்டுள்ளது.

ஈரான் – இஸ்ரேல் இடையிலான போரில் உள்ளே நுழைந்த அமெரிக்கா ஈரானின் 3 முக்கிய அணுசக்தி தளங்கள் மீது 7 B-2 ஸ்டெல்த் குண்டுகளை வீசின. இதற்காக ஏழு B-2 ஸ்டெல்த் குண்டுவீச்சு விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. இதன் மதிப்பு 2.1 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். மேலும் ஃபோர்டோ மற்றும் நடான்ஸ் அணுசக்தி தளங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்காக 14 குண்டுகளை அமெரிக்கா பயன்படுத்தியதாக தெரிகிறது.

 

குண்டுவீச்சு விமானங்கள், போர் விமானங்கள், டேங்கர்கள், கண்காணிப்பு விமானங்கள் மற்றும் துணைக் குழுக்கள் உட்பட 125க்கும் மேற்பட்ட அமெரிக்க விமானங்கள் இந்தப் பணியில் பங்கேற்றுள்ளன. இதற்காக மட்டும் பல நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்களை அமெரிக்கா வாரி இறைத்துள்ளது.

 

அமெரிக்கா மத்திய கிழக்கு மற்றும் ஆப்கானிஸ்தானில் நடத்திய போர்களுக்கு செலவிட்ட தொகையை கட்டிலும், அதனால் பலியான மக்களின் உயிர்கள் மிக, மிக அதிகம். பிரவுன் பல்கலைக்கழகத்தின் வாட்சன் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்டர்நேஷனல் & பப்ளிக் அஃபயர்ஸ் நடத்திய பகுப்பாய்வின்படி , 2001 முதல் அமெரிக்கா தலைமையிலான போர்கள் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், ஈராக், சிரியா, ஏமன் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த சுமார் 9 லட்சத்து 40 ஆயிரம் மக்களின் மரணத்திற்கு நேரடியாக காரணமாக அமைந்துள்ளது.

 

 

இந்த கணக்கில் உணவு, சுகாதாரப் பராமரிப்பு மற்றும் போரால் பரவும் நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சேர்க்கப்படவில்லை. அதையும் சேர்ந்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3.6 மில்லியன் முதல் 3.8 மில்லியன் 36 லட்சம் முதல் 38 லட்சம் வரையிலான மக்களைக் குறிக்கிறது. ஆக மொத்தம் 45 லட்சம் முதல் 47 லட்சம் வரை தொடுகிறது. அமெரிக்கா நடத்திய போர்கள் மூலமாக இதுவரை 30 ஆயிரம் அமெரிக்க ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

 

நாடு வாரியாக பார்த்தால் ஆப்கானிஸ்தான் போரில் 2 லட்சத்து 43 ஆயிரம் பேரும், ஈராக்கில் 3 லட்சத்து 15 ஆயிரம் பேரும், சிரியாவில் 2 லட்சத்து 69 பேரும், ஏமனில் ஒரு லட்சத்து 12 ஆயிரம் பேரையும் அமெரிக்கா கொன்று குவித்துள்ளது.

 

செப்டம்பர் 11 தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பதாகக்கூறி 2001ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி அமெரிக்கா ஆப்கானிஸ்தான் மீது போர் தொடுத்தது. மார்ச் 20, 2003ம் ஆண்டு அதாவது 2 ஆண்டுகள் நீடித்த இந்த போரில் தான் அமெரிக்கா 3 லட்சத்து 15 ஆயிரம் அப்பாவி மக்களை கொன்று குவித்துள்ளது. வாட்சன் நிறுவனத்தின் கூற்றுப்படி, அக்டோபர் 2001 முதல் ஆகஸ்ட் 2021 வரை அவை குறைந்தது 558,000 நேரடி இறப்புகளுக்குக் அமெரிக்கா காரணமாக இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

 

கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் அமெரிக்கா போருக்கு நிதி உதவி அளிப்பதற்காக 5.8 டிரில்லியன் டாலர்களை செலவிட்டுள்ளது. இதில் பாதுகாப்புத் துறைக்கு $2.1 டிரில்லியன் செலவிடப்பட்டுள்ளது. உள்நாட்டு பாதுகாப்பிற்காக 1.1 டிரில்லியன் டாலர்களும், பாதுகாப்புத்துறையின் அடிப்படை பட்ஜெட்டிற்காக $884 பில்லியன் டாலர்களும், வீரர்களின் மருத்துவப் பராமரிப்புக்காக $465 பில்லியன் மற்றும் போருக்கு நிதியளிக்க எடுக்கப்பட்ட கடன்களுக்கான வட்டி செலுத்துவதற்காக $1 டிரில்லியன் டாலர்களும் செலவிடப்பட்டுள்ளது.

 

இஸ்ரேல் உடனான அமெரிக்காவின் 2016 முதல் 2028 வரையிலான ஒப்பந்தத்தின் கீழ் இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆண்டுக்கு 3.8 பில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கி வருகிறது. அமெரிக்காவின் இந்த நிதியுதவியைக் கொண்டு இஸ்ரேல் ஜூன் 24, 2025வரை குறைந்தது 56,077 பாலஸ்தீனியர்களை கொன்று குவித்துள்ளது. சுமாட் ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 848 பேர் காயமடைந்துள்ளனர். வல்லரசு என்ற பெயரில் இப்படி லட்சோப லட்சம் மக்களை அமெரிக்கா தனது பணம் மற்றும் படை பலத்தால் அழித்தொழுத்து வருகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button