உலக நாடுகளை பேரதிர்ச்சியில் ஆழ்த்திய அமெரிக்கா

ஈரானின் அணுசக்தி நிலையங்கள் முற்றிலும் அழிக்கப்படவில்லை என அமெரிக்காவின் உளவுத்துறை வெளியிட்ட அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காயமடைந்தவர்களை இராணுவ ஹெலிகாப்டர்கள் டெல் அவிவில் உள்ள டெல் ஹாஷோமர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. தெற்கு காசா பகுதியில் வீரர்களின் கேரியரை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 605வது போர் பொறியியல் பட்டாலியனைச் சேர்ந்த 8 ஆக்கிரமிப்பு படை வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், தெற்கு காசாவின் கான் யூனிஸ் பகுதியில் ஒரு வீட்டிற்குள் பதுங்கியிருந்த இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படை வீரர்கள் மீதான வெடிகுண்டு தாக்குதலில் சிலர் கொல்லப்பட்டதாகவும் அந்நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது.
ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபடுவதாக கூறி, கடந்த 13 ஆம் தேதி, இஸ்ரேல் அதன் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை நடத்தியது. ஈரானும் பதிலடியாக தாக்குதலை தொடங்கிய நிலையில், இரு நாடுகளுக்கு இடையேயான போராக உருவெடுத்தது.
இதனை தொடர்ந்து, கடந்த 22 ஆம் திகதி ஈரானில் உள்ள ஃபார்டவுவ் , நடான்ஸ் மற்றும் இஸ்பாஹான் ஆகிய 3 அணுசக்தி தளங்கள் மீது “ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்” என்ற பெயரில் அமெரிக்கா நேரடி தாக்குதல் நடத்தியது.
பி-2 ஸ்பிரிட் ஸ்டெல்த் குண்டுவீச்சு விமானங்களை பயன்படுத்தி, GBU-57A என்ற பங்கர் பஸ்டர் குண்டுகளை வீசியது. இதன் மூலம், ஈரானின் அணுசக்தி நிலையங்கள் முற்றிலும் தாக்கியழிக்கப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் அதிபர் நெதன்யாகு தெரிவித்தனர்.
ஆனால் அமெரிக்காவின் குண்டு வீச்சால் ஈரானின் அணுசக்தி நிலையங்கள் சேதமடைந்திருந்தாலும், முற்றிலும் அழிக்கப்படவில்லை என அமெரிக்கா உளவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், அமெரிக்க அதிபர் டிரம்ப், “இந்த அறிக்கை போலியான ஒன்று. ஈரானின் அணுஆயுதம் தயாரிக்கும் ஆற்றலை நாம் முற்றிலுமாக அழித்துவிட்டோம். அணுசக்தி நிலையங்கள் தகர்க்கப்படவில்லை என கூறுபவர்கள் ராணுவத்தின் வெற்றிகரமான தாக்குதலை கொச்சைப்படுத்துபவர்கள்” என கூறி மறுப்பு தெரிவித்துள்ளார்.
ஆனால் ஈரானின் அணு உலைகள் முழுமையாக அழிக்கப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறும் கருத்தை மீண்டும், மீண்டும் அந்நாட்டின் உளவுத்துறை மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.