உலகம்

இஸ்ரேலுக்கு வெடிகுண்டு – பாலஸ்தீனத்துக்கு நிதி! அமெரிக்கா விசித்திரம்!

குண்டு வீச இஸ்ரேலுக்கு நிதி – சவப்பெட்டி வாங்க பாலஸ்தீனியர்களுக்கு நிதி! அமெரிக்காவின் விசித்திர உதவிகள்!

ஒரு பக்கம் பாலஸ்தீனியர்களை கொன்று குவிக்க இஸ்ரேலுக்கு ஆயுதங்களை அனுப்பி வரும் அமெரிக்கா, மறுபுறம், இஸ்ரேலால் அடைந்த சேதங்களை சரிசெய்து கொள்ள பாலஸ்தீனத்துக்கு நிதி வழங்கும் விசித்திர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.

இஸ்ரேலுக்கு கடந்த மே மாதம் நிறுத்தப்பட்ட ஆயுதங்களை தற்போது, வழங்கத் தொடங்கியுள்ளது அமெரிக்கா. அந்த அடிப்படையில் பேரழிவுகளை ஏற்படுத்தும் 200 கிலோ எடைகொண்ட, போர் விமானங்களில் இருந்து எறியப்படும் வெடிகுண்டுகளின் சப்ளையை அமெரிக்கா தொடங்கியுள்ளது.

மறுபக்கம் காசா மற்றும் மேற்குகரையின் வளர்ச்சிக்காக 100 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 834 கோடி ரூபாய் ஆகும். இதுகுறித்து அமெரிக்க உதவி நிறுவனமான USAID கூறும் போது, காசா மக்களின் உயிர் காக்கும் உதவிக்காக இந்த தொகை வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

அதே நேரம் இந்த உதவிகள் மக்கள் கையில் சென்று சேர்வதற்கு இஸ்ரேல் பல தடைகளை விதித்துள்ளதாக அந்த அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. அங்கு முற்றிலும் சட்டத்திற்கு அப்பாற்பட்ட நிலை நிலவுவதாக தெரிவித்துள்ளது.

இதுவரை காசாவுக்கு 774 மில்லியன் டாலர்களை அமெரிக்கா வழங்கியுள்ளதாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது. இந்திய மதிப்பில் சுமார் 6462 கோடி ரூபாய் ஆகும்.

மறுபக்கம் இஸ்ரேல் ராணுவத்துக்கு வருடத்திற்கு 3.8 பில்லியன் டாலர் உதவிகளை வழங்கவும் அமெரிக்கா முடிவு செய்து, அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்திய மதிப்பில் 3 லட்சத்து 17 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும்.


====

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button