அம்பானி கல்யாணம் – விடுதி கட்டணங்கள் ரூ. 10 ஆயிரத்தில் இருந்து 1 லட்சமாக உயர்வு!

ஆனந்த் அம்பானி திருமணத்தையொட்டி, விடுதிக் கட்டணங்கள் அதிரடி உயர்வு..
10 ஆயிரமாக இருந்த கட்டணங்கள் ஒரு லட்சம் ரூபாய் வரை அதிகரிப்பு…
முக்கிய நட்சத்திர விடுதிகள் முழுமையாக முன்பதிவு…
ஆனந்த் அம்பானி ராதிகா மெர்சன்ட் திருமணம், மும்பை குர்லா சென்டர் பகுதியில் உள்ள jio world convention centre இல் ஜுலை 12ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்த திருமணத்திற்கு வரும் விருந்தினர்கள் மட்டுமின்றி, அவர்களை பார்க்க உலகம் முழுவதும் இருந்து, சுற்றுலாப் பயணிகள், ஊடகவியலாளர்களும் வருகின்றனர். முக்கிய விருந்தினர்கள் வருவதால், அவர்களுக்கான பாதுகாவலர்கள், உதவியாளர்கள் என பலரும் வர உள்ளனர்.
இதனால் மும்பையில் உள்ள தாஜ், ஹையாட் உள்ளிட்ட பிரபல 5 நட்சத்திர விடுதிகளில் ஏற்கனவே முன்பதிவுகள் முடிந்து விட்டன. அங்கு அறைகள் காலியாக இல்லை.
அதற்கு அடுத்தபடியாக உள்ள சொகுசு விடுதிகளில், சாதாரணமாக ஒரு நாள் கட்டணம் சுமார் 10 ஆயிரம் ரூபாய் இருக்கும் நிலையில், தற்போது, 90 ஆயிரம் ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளன.
போக்குவரத்தை கட்டுப்படுத்த பல்வேறு விதிமுறைகளை போலீசார் வகுத்துள்ளனர். அந்த வகையில் ஜுலை 12 ஆம் தேதி அதிகாலை முதல், ஜுலை 15 ஆம் தேதி நள்ளிரவு வரை முக்கிய சாலைகளில் போக்குவரத்து தடை, மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நெட்டிசன்கள் பலரும் இதனை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
===