கோவில் திருவிழாவில் அல்லாஹு அக்பர்… உணர்வுபூர்வமாக முழங்கிய இந்து பக்தர்கள்…

மத வெறுப்புக்கு மரண அடி!மதுரை மாவட்டம் சிக்கந்தர் சாவடி கிராமத்தில் உள்ள கிராம மந்தையம்மன் கோவில்,காளியம்மன், பத்ரகாளியம்மன், முனியாண்டி கோயில் உற்சவ விழா திருவிழா நூற்றாண்டுகளை கடந்து ஒவ்வொரு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெகு விமர்சையாக நடைபபெற்றுவருகிறது.
அதன்படி இந்த ஆண்டு உற்சவ விழா தொடங்கியது.அப்போது இந்து – இஸ்லாமிய மக்கள் இணைந்து அல்லாஹ் அக்பர் – ஓம் சக்தி பராசக்தி ஓம் என்ற பக்தி முழக்கங்களை எழுப்பியவாறு கொடி கம்பங்களை நட்டுவைத்து சிறப்பு வழிபாடு செய்தனர்.பின்னர் விழா தொடங்கியதற்கான வான வேடிக்கைகள் நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்க வந்த அனைத்து பக்தர்களுக்கும் இஸ்லாமியர்கள் சர்பத் உள்ளிட்டவற்றை வழங்கினர்.
பிறைக்கொடி ஏற்றப்பட்டு கோவில் விழா தொடங்கிய நிலையில் ஊரணி கரையில் இருந்த சிக்கந்தர் பாத்திஹா கொடுக்கும் இடத்தில் பக்தர்கள் தீபம் ஏற்றியும், ஊதுபத்தி ஏற்றியும் பூக்களை தூவியும் வழிபட்டனர். தொடர்ந்து கிராமத்திற்கு சொந்தமான அனைத்து சமூகத்தினருக்கும் மாலை அணிவித்தும் வஸ்திரம் சாத்தப்பட்டும் மரியாதை அளிக்கப்பட்டது.
மதுரையில் நூற்றாண்டு கடந்தும் சமூக நல்லிணக்கத்தை எடுத்துரைக்கும் வகையில் பாரம்பரியமாக மந்தையம்மன் கோவில் திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றுவருகிறது.இதில் இஸ்லாமியர்களும் – இந்துக்களும் ஒற்றுமையோடு சாதி மத வேறுபாடின்றி கொண்டாடிவருகின்றனர்.