வைரல்

அனைத்து பிரபலங்களும் அம்பானி கல்யாணத்தில்… ஆனால் ராகுல் காந்தி எங்கு இருந்தார் தெரியுமா?

ராகுல் காந்தியின் வீட்டிற்கு சென்று திருமணத்திற்கு அழைத்த முகேஷ் அம்பானி…
அனைத்து பிரபலங்களும் ஆஜர் ஆன நிலையில், ராகுல் எங்கிருந்தார் தெரியுமா?
சாதாரண உணவகத்தில் சாப்பிடும் ராகுல்காந்தியின் வீடியோ வைரல்…

ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்சன்ட் திருமணம் நாடே மெச்சும் அளவில், மிக ஆடம்பரமாக கொண்டாடப்பட்டது.
பிரதமர் முதல் பியூன் வரை, சூப்பர் ஸ்டார்கள் முதல் சுமார் ஸ்டார்கள் வரை நாட்டில் உள்ள பல்லாயிரக்கணக்கான விஐபிக்கள், விவிஐபிக்கள் கலந்து கொண்டனர்.

வழக்கமாக திருமணத்திற்கு வருபவர்கள் தான் மண மக்களுக்கு பரிசுகளை வழங்குவார்கள். ஆனால் வழக்கத்திற்கு மாறாக, விருந்துக்கு வந்தவர்களுக்கு கோடிக்கணக்கில் வாரி இறைத்தது அம்பானி குடும்பம்.

ஒரு பக்கம், இது அவர்கள் சம்பாதித்த பணம், ஆடம்பரமாக செலவு செய்ய அவர்களுக்கு உரிமை உள்ளது போன்ற சப்பைக் கட்டுகள் கட்டப்படாலும், உண்ண உடை, இருக்க தூய்மையான இருப்பிடம், கல்வி, சுகாதாரம் இன்றி அல்லல்படும் எத்தனையோ கோடி மக்கள் வாழும் இந்நாட்டில், ஒரு தொழில் அதிபர் இவ்வளவு ஆடம்பரமாக திருமணம் செய்ய வேண்டுமா?

இது பிறருக்கு தவறான முன்னுதாரணமாக இருக்காதா, பலரும் பணம் சம்பாதிப்பது மட்டுமே நோக்கம் என முடிவு செய்து தவறான வழிகளை தேர்வு செய்ய மாட்டார்களா போன்ற கேள்விகளும் முன் வைக்கப்படுகின்றன. இந்த நிலையில், இந்த கேள்விகள் அனைத்திற்கும் முத்தாய்ப்பாக, பத்தோடு பதினொன்றாக இருக்காமல், தனக்கென்று தனி முத்திரையை பதித்துள்ளார் ராகுல் காந்தி.

நாட்டில் உள்ள முக்கிய விஐபிக்கள் அம்பானி வீட்டில் அறுசுவை விருந்து சாப்பிட்ட அதே நேரத்தில், ராகுல் காந்தியோ நடுத்தர உணவு விடுதி ஒன்றில், மக்களோடு மக்களாக அமர்ந்து உணவு சாப்பிட்டுள்ளார்.அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

நாட்டில் உள்ள சில தொழில் அதிபர்களின் முன்னேற்றத்திற்காகவே நரேந்திர மோடி பாடுபடுகிறார் என தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார் ராகுல் காந்தி. இந்த நிலையில், அம்பானி வீட்டுக் கல்யாணத்தில் அவரே கை நனைத்தால், அது தவறான முன் உதாரணம் ஆகிவிடும் என்பதால், தனது வீட்டிற்கு முகேஷ் அம்பானி நேரில் வந்து அழைத்தும், அங்கு செல்லாமல் புறக்கணித்துள்ளார் ராகுல்காந்தி.

கோடிகளை கொட்டி எத்தனையோ பிரபலங்களை விலைக்கு வாங்கிய அம்பானியால், விலைக்கு வாங்க முடியாத ஒரே நபராக உருவெடுத்துள்ளார் ராகுல்காந்தி.
பல ஆயிரம் கோடிகளை கொட்டி நடத்தப்பட்ட இந்த திருமணத்தில் குறை என்ற ஒன்றும் உள்ளது என்றால், அது ராகுல் காந்தியின் புறக்கணிப்பு தான் என்பது குறிப்பிடத்தக்கது.
====

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button