அரசியல்
இந்திய குடியுரிமை கிடைத்து விட்டதால் முதல்முறையாக வாக்களித்த அக்ஷய் குமார்!

பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் முதன்முறையாக வாக்களித்துள்ளார். இந்திய நடிகராக இருந்தாலும் கனடா நாட்டு குடிமகனாக அவர் இருந்ததால், வாக்குரிமை இல்லாமல் இருந்தார். அதே நேரம் இந்திய தேச பக்தி படங்களில், மக்களுக்கு தேசபக்தியை அவர் வலியுறுத்தி வந்ததால் விமர்சனங்கள் எழுந்தது. இந்திய குடிகமனாகக் கூட இல்லாமல், இந்தியர்களுக்கே வந்து தேச பக்தியை பற்றி பாடம் எடுக்கலாமா என கேள்விகள் எழுந்தன. அவரை கனடா குமார் என்றும் கிண்டல் செய்து வந்தனர். இதனால் கடந்த ஆண்டு இந்திய குடியுரிமை வாங்கிய அவர், தற்போது, மும்பையில் தனது வாக்கை செலுத்தியுள்ளார்.