விவாகரத்து கோரிய ஐஸ்வர்யா-தனுஷ் தம்பதி : மகன்கள் யாரிடம் இருப்பார்கள்?

தமிழ்நாட்டின் நட்சத்திர தம்பதிகளாக வலம்வந்த ஐஸ்வர்யா-தனுஷ் தம்பதி பிரிவதாக அறிவித்தது சினிமா துறையை தாண்டியும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவர்களின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நீதிமன்றத்தில் விவாகரத்துக்கும் இருவரும் விண்ணப்பித்துள்ளனர். இதன் மூலம் இவர்கள் பிரிவு உறுதியாகியுள்ளது.
இந்த இரண்டு ஆண்டுகளில் இருவரும் தனித் தனியே வசித்தாலும், மகன்களின் பள்ளி நிகழ்ச்சியில் மட்டும் இருவரும் ஒன்றாக கலந்துகொண்டனர். தற்போது இருவரும் விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ள நிலையில், இவர்களின் மகன்கள் யாரிடம் இருப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஐஸ்வர்யா-தனுஷ் தம்பதிக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். விவாகரத்துக்கு பின்னர் பொதுவாக குழந்தைகள் தாயிடமே ஒப்படைக்கும் வழக்கம் உள்ளதால் இந்த வழக்கிலும், குழந்தைகள் ஐஸ்வர்யாவிடம் ஒப்படைக்கப்படவே அதிக வாய்ப்புள்ளது. அதே நேரம் தந்தை இதற்கு மறுப்பு தெரிவித்து, தன்னிடம் குழந்தைகளை ஒப்படைக்க வலுவான காரணங்களை முன்வைத்தால் குழந்தைகள் தந்தையிடம் ஒப்படைக்கப்படும்.
ஆனால், தனுஷ் தனது மகன்களை தன்னுடன் இருக்குமாறு கோரிக்கை விடுக்கப்போவதில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் ஐஸ்வர்யா-தனுஷ் தம்பதியின் மகன்கள் ஐஸ்வர்யாவுடனே இருக்கவே அதிக வாய்ப்புள்ளது. இதில் இவர்களின் மூத்த மகன் யாத்ராவுக்கு 17 வயது ஆகவுள்ளது. இதனால் ஒரு வருடத்துக்கு பின்னர் அவர் மேஜராகிவிடுவார் என்பதால் அவர் யாருடன் இருக்க விரும்புகிறார் என்பதே அவரே முடிவு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஐஸ்வர்யா-தனுஷ் ஆகியோரின் விவாகரத்துக்கு பிறகு அவர்களின் மகன்கள் யாரிடம் இருப்பார்கள் என்பதே சினிமா வட்டாரத்தில் மிகப்பெரும் கேள்வியாக இருக்கிறது.
================