விமான நிலைய செயல்பாடுகள் நிறுத்தம்!

மீண்டும் மிகப்பெரிய தாக்குதல் ஒன்றை நடத்தி இஸ்ரேலை நிலைகுலைய வைத்துள்ளனர் ஏமன் ஹவுத்திக்கள். இஸ்ரேலின் தெற்கு பகுதி வழியாக வந்த 2 பாலிஸ்டிக்ஸ் மிசல்ஸ்கள் மூலம் டெல் அவிவ் உள்ளிட்ட மத்திய இஸ்ரேல் முழுவதும் அபாய ஒலி ஒலிக்கப்பட்டுள்ளது.வெள்ளிக்கிழமை அதிகாலை நடத்தப்பட்ட இந்த தாக்குதலை, இஸ்ரேல் எல்லைக்கு வெளியே முறியடித்ததாக ஆக்கிரமிப்பு ராணுவம் கூறிய நிலையில், அதனை ஏமன் படைகள் நிராகரித்துள்ளன.
இந்தத் தாக்குதலில், பதுங்கு குழிகளை நோக்கி ஓடிய 17 இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு பொதுமக்கள் காயம் அடைந்துள்ளதாக முதல்கட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சைரன் ஒலியால், சாலையோரங்களில் படுத்து உயிர் பிழைத்த காட்சிகளும் வெளியாகியுள்ளன.இதே போல் டெல் அவிவில் உள்ள பென்குரியன் விமான நிலையத்தில், விமான போக்குவரத்து, தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏமன் மிசல்ஸ்கள் இஸ்ரேலுக்குள் நுழையும் அவரை அவற்றை இடைமறிக்க முடியாமல் போவது, இஸ்ரேல் வான் படையின் அண்மைக்கால தோல்விகளை காட்டுவதாக, அந்நாட்டின் சேனல் 14 ஊடகம் குற்றம்சாட்டியுள்ளது.
இஸ்ரேலை அடையும் வரை ஏமன் மிசல்ஸ்கள், ராடாரின் கண்காணிப்பில் இருந்து தப்புவது, ஒரு ஆபத்தான அறிகுறி என அந்த ஊடகம் கூறியுள்ளது.
எனினும் இஸ்ரேலின் கருத்துருவாக்கத்தை நிராகரித்துள்ள ஏமன் படைகள், தங்களது தாக்குதல் இஸ்ரேலுக்கு வெளியே இடைமறிக்கப்படவில்லை என்றும் தங்களது துல்லிய தாக்குதல் பற்றிய விரிவான தகவல்களுடன் அறிக்கை வெளியிடப்படும் என கூறியுள்ளனர்.டெல் அவிவ் நகரம் இனி பாதுகாப்பான ஒன்று இல்லை என்பதை ஆக்கிரமிப்பு மக்கள் உணர வேண்டும் என்றும் ஏமன் படைகள் தெரிவித்துள்ளன.