உலகம்

தயார் நிலையில் வான்படை – ஈரான் தளபதி அறிவிப்பு

எத்தகைய எதிரிகளையும் சந்திக்க தயாராக உள்ளோம்…
ஈரானின் வான்படைத் தளபதி அறிவிப்பு…

ஈரான் மேற்கு ஆசிய பிராந்தியத்தில் வலிமை மிக்க வான் வலி பாதுகாப்பை கொண்ட நாடாக உருவெடுத்துள்ளதாக அந்நாட்டின் ராணுவ வான் படைத் தளபதி அலி ரஸா சபாகி (Alireza Sabahi-Fard) தெரிவித்துள்ளார்.
ஈரான் எந்த வெளிநாட்டின் உதவியும் இல்லாமல், தனது ஆயுதங்களை முழுக்க முழுக்க சொந்த ராணுவ தொழில்நுட்ப வல்லுநர்களின் மூலம் உள்நாட்டிலேயே தயாரித்து வருவது, எதிரிகளுக்கும் தெரியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

8 ஆண்டுகள் தொடர்ந்து ஈராக்குடன் நடந்த போர் காரணமாக, படிப்பினை பெற்ற ஈரான், தற்போது, தனது நிலையை நவீனமாக்கி, வலுப்படுத்திக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
எந்த ஒரு போரையும் எதிர்கொண்டு வெற்றிபெறும் அளவிற்கு வான்படை தயார் நிலையில் உள்ளதாக அவர் கூறியுள்ளார். முன்னதாக ஈரானின் புதிய ராடார் சிஸ்டம் மற்றும் வான் வழிப் பாதுகாப்பு அமைப்புகளை அவர் அறிமுகம் செய்து வைத்தார்.

இஸ்ரேலுக்கு எதிராக பெரிய தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ள ஈரான், அதனைத் தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் கூட்டணிப் படைகள் தாக்குதல் நடத்தினால், அவற்றை திறமையாக எதிர்கொண்டு முறியடிக்கும் வகையில் தயாராகி வருகிறது. இதனையொட்டி, அந்த நாட்டின் ராணுவ தலைவர்கள், தீவிர ஆய்வுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.


====

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button