உலகம்

ட்ரம்பின் போர் அறிவிப்பை மீறி 6 கட்டங்களாக தாக்குதல் நடத்திய ஈரான்…!

செவ்வாய்கிழமை காலை ஈரான் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலின் பீர்சபாவில் 8 பேர் கொல்லப்பட்டதோடு, பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

போர் நிறுத்தத்தை டிரம்ப் அறிவித்த பிறகு, முதல் முறையாக ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. 6 கட்டங்களாக இந்த தாக்குதலை ஈரான் நடத்தியுள்ளது.

முதல்கட்டத் தாக்குதலில் இஸ்ரேலின் அல் நகாப் பாலைவன மையம் குறிவைக்கப்பட்டது.
2ஆம் கட்டத் தாக்குதலில் டெல் அவிவ், ஜெருசலம் நகரங்கள் குறிவைக்கப்பட்டன. அங்கு அபாய எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டது. பீர் அல் சபா நகரத்தில் 7 மாடிக் கட்டிடம் தகர்க்கப்பட்டது. இதில் 8 பேர் கொல்லப்பட்டதோடு, பலர் படுகாயம் அடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

3வது கட்டத் தாக்குதலிலும் டெல் அவிவ், மற்றும் பீர் அல் சபாவில் 3வது முறையாக அபாய எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டது.
ஈரானின் 4ஆம் கட்டத் தாக்குதலில் மீண்டும் டெல் அவிவில் அபாய எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டது. இதனால் பங்கரில் இருந்து வெளியே வந்த செட்டிலர்கள் மீண்டும் பங்கர்களுக்குள் ஒளிந்தனர்.
தொடர்ந்து 6 கட்டத் தாக்குதல்களை ஈரான் நடத்தி முடித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button