மீண்டும் ஒரு ஐ.நா. பள்ளிக்கூடத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் – 17 பேர் பலி, 80 பேர் காயம்!

காசாவில் மீண்டும் பள்ளிக்கூடம் மீது குண்டு வீசிய இஸ்ரேல்…
17 பேர் சம்பவ இடத்திலேயே பலி… 80 பேர் படுகாயம்…
காசாவின் அப்பாவி பொதுமக்கள் மீது இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படைகள் 283வது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றன. இதுவரை 38,584 பேர் கொல்லப்பட்டுள்ளதாக காசா அரசு தெரிவித்துள்ளது. 88,881 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
மத்திய காசாவின் தெய்ர் அல் பலாவில் உள்ளது அல் நுசைரத் அகதிகள் முகாம். இதன் மீது இஸ்ரேல் இதுவரை பல முறை தாக்குதல் நடத்தியுள்ளது. இந்நிலையில் அங்குள்ள ஐ.நா. பள்ளிக் கூடத்தின் மீது இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படைகள் ராக்கெட் வீசி தாக்குதல் நடத்தின.
இதில் அந்தப் பள்ளிக் கூடத்தில் தஞ்சம் அடைந்துள்ள பெண்கள், குழந்தைகள் உட்பட 17 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
80 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே அல் மவாசி அகதிகள் முகாம் மீது ராக்கெட் மற்றும் டிரோன் தாக்குதல் நடத்தி, சுமார் 90 பேரை இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படைகள் கொன்றொழித்தன.
இதற்கு பல உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தாலும், தொடர்ந்து சில நிமிடங்கள் கூட இடைவெளி விடாமல், இஸ்ரேல் ஆக்கிமிரப்பு ராணுவம் ஒவ்வொரு நாளும் பாலஸ்தீனியர்கள் மீது பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டு வருகிறது.
உலக நாடுகளின் கண்டனங்கள் இஸ்ரேலை எந்த விததத்திலும் பாதிக்கவில்லை. தற்போது, அகதிகள் முகாமில் உள்ள பள்ளிக் கூடம் மீது கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
====