உலகம்

மீண்டும் ஒரு அவமானம்!

லெபனானில் சனிக்கிழமை அதிகாலை, 7 அடுக்குமாடி குடியிருப்புகளை தகர்த்துள்ளன, இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு பயங்கரவாத படைகள். ஏற்கனவே காசாவில் 42 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

சர்வதேச நீதிமன்றம் நெதன்யாகு உள்ளிட்ட பயங்கரவாதிகளை, சர்வதேச போர்க்குற்றவாளிகளாக அறிவித்து, கைது வாரண்ட் பிறப்பிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்தச் சூழலில், ஐக்கிய நாடுகள் மன்றத்தின் பொதுச் சபையில் நெதன்யாகு பேச அனுமதி அளிக்கப்பட்டது.

இதனைக் கண்டித்து, உலக நாடுகளின் பிரதிநிதிகள் கொத்து கொத்தாக வெளியேறினர். அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளின் பிரதிநிதிகள் மட்டுமே அங்கு அமர்ந்திருந்தனர். அங்கு பேசிய நெதன்யாகு மீண்டும் வெறுப்பை கக்கினார். தாங்கள் நினைத்தால், ஈரானின் எந்தப் பகுதியையும் தாக்க முடியும் என்றார்.முன்னதாக போர்க்குற்றவாளி நெதன்யாகுவின் வருகையை கண்டித்து, அமெரிக்காவின் பல நகரங்கள் போர்க்கோலம் பூண்டன. பல்லாயிரக்கணக்கான மக்கள் சாலைகளில் திரண்டு, போர்க்குற்றவாளியை கைது செய் என முழக்கங்களை எழுப்பினர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button