தமிழ்நாடு

மாணவர்களின் படைப்பாற்றல் அறிவுத்திறனை வளர்க்கும் அபாகஸ் –மாநில அளவிலான போட்டி!

மாணவர்களின் படைப்பாற்றல் அறிவுத்திறனை வளர்க்கும் அபாகஸ்…
சென்னையில் நடந்த பிரமாண்ட போட்டி!

சென்னை குரோம்பேட்டையில் பிம்ஸ் அபாகஸ் கல்வி நிறுவனம் சார்பில் மாணவர்களின் படைப்பாற்றல், தன்னம்பிக்கை, பகுப்பாய்வு திறனை மேம்படுத்தும் வகையில் மாநில அளவிலான போட்டிகள் நடத்தப்பட்டது.இதில் சென்னை, தஞ்சாவூர், மதுரை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

பல்வேறு பிரிவுகளில் நடத்தப்பட்ட போட்டிகளில், குறைந்த நேரத்தில் அதிக கணக்குகளில் தீர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு வெற்றி கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கல்வியாளர்கள் மதுராந்தகம் செண்டு பொறியியல் கல்லூரி முதல்வர் முகம்மது அப்துல்காதர், வண்டலூர், கொளப்பாக்கம் ஸ்ரீ பாலாஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் அனு தேவி, இந்துஸ்தான் கடல்சார் பயிற்சி நிறுவன துணை இயக்குனர் பாலசுப்பிரமணியன், ஆகியோர் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினர்.

முன்னதாக பிம்ஸ் அபாகஸ் கல்வி நிலையத்தில் அபாகஸ் படிப்பினை நிறைவு செய்த 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைப்பெற்றது. இதில் குழந்தைகள் கவுன் அணிந்து பட்டங்களை மகிழ்ச்சியாக பெற்று சென்றனர்.
நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை பீம்ஸ் அபாகஸ் பயிற்சி கல்வி நிறுவனத்தின் இயக்குனர் சரவணன் செய்திருந்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button