“அரபு ராணுவங்களால் செய்ய முடியாததை செய்துள்ள லாரி ஓட்டுநர்”

கோழை அரபு ராணுவங்களால் முடியாததை, தனி ஆளாக செய்துள்ளார்…
ஜோர்டான் லாரி ஓட்டுநருக்கு ஹமாஸ் பாராட்டு…
இஸ்ரேல் உடன் நட்பு பாராட்டி வரும் சன்னி முஸ்லீம் நாடு ஜோர்டான். இஸ்ரேலுக்கு எதிராக பொதுமக்கள் பல போராட்டங்களை நடத்தி வந்தாலும், அந்நாட்டு மன்னர் இரண்டாம் அப்துல்லா, இஸ்ரேலுடன் நல்லுறவு மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் ஜோர்டானைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் மஹர் அல் ஜெசி என்பவர் தனி ஆளாக சென்று, 3 இஸ்ரேல் போலீசாரை சுட்டுக் கொன்று, அவர்களது தாக்குதலில் மரணம் அடைந்துள்ளார். இவரது இறப்பை வீர மரணம் என்றும் ரத்த சாட்சி என்றும் ஹமாஸ் இயக்கம் வர்ணித்துள்ளது.
இதுகுறித்து அந்த இயக்கத்தின் ராணுவ பிரிவு செய்தித் தொடர்பாளர் அபு உபைதா கூறியுள்ளதாவது, இது ஒரு ஹீரோயிஸ, வழக்கத்திற்கு மாறான நடவடிக்கை. அல் அக்சா புயல் நடவடிக்கையில் மஹர் அல் ஜாசியும் ஒரு உயிர்த் தியாகியாக இணைந்துள்ளார்.
ஜோர்டான் ஹீரோ வைத்திருந்த ஒரு கைத்துப்பாக்கி, பாலஸ்தீனியர்களையும் அல் அக்சா மசூதியையும் காப்பதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்த ஒரு கைத்துப்பாக்கி, அரபு நாடுகள் வைத்துள்ள மாபெரும் ஆயுதக் களஞ்சியங்களை விட பலம் மிக்கது.
உலக இஸ்லாமிய உம்மத்தின் மனநிலையை இந்த தாக்குதல் பிரதிபலிக்கிறது. இஸ்ரேல் இனி சந்திக்கப்போகும் மோசமான சூழலை முன்னறிப்பு செய்யும் விதமாக அமைந்துள்ளது.
போர்க்களங்களில் உள்ள எங்களது வீரர்கள் இந்த ஜோர்டான் நாயகனுக்காக இறுதித் தொழுகை நடத்துவார்கள். இவ்வாறு அபு உபைதா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.