ரூ.3000 கோடியில் ஒரு முட்டாள்தனமான திட்டம்? செல்லூர் ராஜுவையும் மிஞ்சிய பாஜக அரசு!

நம்ம ஊரில் அணையில் உள்ள நீர் ஆவியாவதை தடுக்க தெர்மாகோல் வைத்த செல்லும் ராஜுவின் கத எல்லாருக்கும் தெரியும். அதன்பின் அந்த தெர்மாகோலுக்கு ஏற்பட்ட நிலயும் அனைவர்க்கும் தெரியும்.
அதற்கு செலவான தொகை கூட குறைவுதான். ஆனா, தெர்மாகோல் கதைய விட மோசமான கதை ஒன்னு வடஇந்தியாவில் நடந்திருக்கு.
மத்திய பிரதேச மாநிலம் கந்த்வா மாவட்டத்தில உலகத்தின் மிகப்பெரிய சூரிய மின்தகடு ஆலை ஒன்ன அமைச்சிருக்காங்க. இதுக்கு மட்டும் 3 ஆயிரம் கோடி ரூபா செலவு செஞ்சிருக்காங்க.
ஆனா, இவங்க choose பண்ண இடத்துல, வெயில் காலத்துல அடிக்கடி புயல் காற்று எல்லாம் வீசுமாம். ஆனா, அதை பற்றி கவல படாம அங்க 3 ஆயிரம் கோடிக்கு சூரிய மின்தகடு ஆலையை கட்டியிருக்காங்க. இந்த ஆலையை விரைவில் தொடங்கவும் திட்டம் போட்டு இருக்காங்க.
ஆனா, அதுக்கு முன்னாடியே அங்க வழக்கம்போல கோடைகால புயல் வீசியிருக்கு.. இந்த பேய் காத்துல இவங்க வச்சியிருந்த சூரிய மின்தகடு எல்லாம் அடிச்சிட்டு போயிருக்கு. இந்த ஆலையில் இருந்துமட்டும் 100 மெகாவாட் மின்சாரத்தை எடுக்க திட்டம் போட்டு இருக்காங்க. இதுக்காக மத்தியப் பிரதேச அரசாங்கம் பெரிய அளவுல செலவும் செஞ்சி இருக்காங்க.
ஆனா, மின்சார உற்பத்தி தொடங்குறதுக்கு முன்னாடியே புயல் காத்து அடிச்சி, பல நூறு கோடிக்கு சேதம் ஏற்பட்டிருக்கு. சரி இவ்வளவு சேதம் வந்துட்டு, இதுக்கு அப்புறம் இந்த ப்ராஜெக்ட்டை மூடிடுவாங்கனு நினைச்சா… அதான் இல்லை, கூடுதல் செலவு செஞ்சி மீண்டும் இந்த ப்ராஜெக்ட்டை முடிச்சி கரண்ட் உற்பத்தி செய்வோம்னு அறிவிச்சி இருக்காங்க. அப்போவும் புயல் அடிக்குமே, அதுக்கு என்ன செய்யப்போறீங்கனு கேட்டா, அதுக்கு இன்னும் பதிலே வரல.
இந்த திட்டம் வரும்போதே, அங்க புயல் காற்று அடிக்கும், அதனால அதுக்கு வேற ஏற்பாடு செய்யனும்னு சில அதிகாரிகள் சொல்லியிருக்காங்க. ஆனா, நிர்வாகம் அதையெல்லாம் பாத்துக்கலாம் என்று சொல்லி, இந்த ஆலையை கட்டி இப்போ பல நூறு கோடி நஷ்டத்தை ஏற்படுத்தியிருக்காங்க. இப்போ சொல்லுங்க, இது தெர்மாகோல் கதைய விட மோசமான கதைதானே என்று….
=========