அரசியல்இந்தியா

ஹிண்டன்பர்கின் ஒரு அறிக்கை! ரூ.1 லட்சம் கோடி அதானிக்கு நட்டம்!

இந்திய தொழிலதிபர் அதானிக்கு எதிராக அமெரிக்க பொருளாதார ஆராய்ச்சி நிறுவனமான ஹின்டன் பர்க்
2வது முறையாக மிகப்பெரிய குற்றச்சாட்டு ஒன்றை சுமத்தியுள்ளது.

அது மட்டுமின்றி இந்திய பங்குகள் ஒழுங்காற்று வாரியமான செபி அமைப்பின் பெண் தலைவர் மீதும் அந்த அமைப்பு பரபரப்பு குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது.இந்த குற்றச்சாட்டுகள் இந்தியாவில் மிகப் பெரும் அரசியல் பிரளயத்தை ஏற்படுத்தியுள்ளன.

கடந்த 2023 ஆம் ஆண்டு இதே போன்ற ஒரு குற்றச்சாட்டை அதானி மீது ஹிண்டன் பார்க் சுமத்தியது.இதனால் அம்பானிக்கு 150 பில்லியன் அமெரிக்க டாலர்கள் நட்டம் ஏற்பட்டது அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 12 லட்சம் கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டது.

தற்போது அதானிக்கு ஒரே நாளில் ஒரு லட்சத்து 13 ஆயிரம் கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளது.அதானி தனது பங்குகளின் மதிப்பை உயர்த்த மோசடியான நடைமுறைகளில் ஈடுபட்டதாக அந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

இதனை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய செபி அமைப்பும், அதன் பெண் தலைவரும் இதற்கு உடந்தையாக இருப்பதாகவும், அந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.இதன் மூலம் பெறும் ஆதாயங்களை செபி அமைப்பின் பெண் தலைவர் வெளிநாடுகளில் முதலீடு செய்திருப்பதாகவும் அந்த அமெரிக்கா அமைப்பு கூறியுள்ளது.

இதுவே தற்போது இந்தியா முழுவதும் எழுந்துள்ள பிரச்சனைக்கு காரணமாக உள்ளது.தற்போதைய குற்றச்சாட்டை தொடர்ந்து அதானிக்கு ஓரிரு நாளில் மட்டும் சுமார் ஒரு லட்சத்து 13,000 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளது.

அதே நேரம் இந்த குற்றச்சாட்டுகளை அதானி மற்றும் செபி அமைப்பின் பெண் தலைவர் மாதவி தரப்பினர்
மறுத்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button