இறந்தவர்களுக்கு உயிர் கொடுக்கும் ரோபோ? உலகத்தை உலுக்கிய கண்டுபிடிப்பு!

தலையை மாற்றி, இறந்தவர்களுக்கு உயிர் கொடுக்கும் ரேபோ…அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட தகவலால் உலகம் முழுவதும் பரபரப்பு…அமெரிக்காவைச் சேர்ந்த Brain bridge என்ற மருத்துவ Startup நிறுவனம் வெளியிட்டுள்ள வீடியோ உலகத்தையே உலுக்கியுள்ளது.தலைமாற்று அறுவை சிகிச்சை என்று கூறப்பட்டாலும், உண்மையில் இது இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் சிகிச்சையாகவே கருதப்படுகிறது. உயிரிழந்தவர்களை இறைவனால் மட்டுமே உயிர்ப்பிக்க முடியும் என்ற கூற்றை, பொய்யாக்க, அறிவியல் அறிஞர்கள் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர்.
ஆனால் இது வரை அது சாத்தியமாகவில்லை.இந்த நிலையில் இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, அதன் அருகே நெருங்கிவிட்டதாக அந்த அமெரிக்க நிறுவனம் கூறியுள்ளது.மூளைச் சாவு அடைந்து, உடல் உறுப்புக்கள் நல்ல நிலையில் இருக்கும் ஒருவரின் உடலை தானமாக பெற்றுக் கொள்கின்றனர்.அவரது உடலில் தலையைத் தவிர பிற பகுதிகள் நல்ல நிலையில் இருக்கும்.
அடுத்ததாக உடலில் புற்று நோய், முதுகு தண்டுவட முறிவு போன்ற பிரச்னைகளால், உயிர் பிரியும் நிலையில் உள்ளவரின் உடலையும் பெற்றுக் கொள்கின்றனர். அவரது உடலில் தலைப் பகுதி நல்ல நிலையில் இருக்கும்.இந்நிலையில் அந்தநிறுவனம் உருவாக்கியுள்ள ரோபோ, ஒரே நேரத்தில் மூளைச் சாவு அடைந்தவரின் தலையை அகற்றி, விட்டு, அவரது உடலில், மற்றவரின் தலையை பொருத்துகிறது. இதற்கான அறுவையை சிகிச்சையை அந்த ரோபோ அதிவேகத்தில் செய்கிறது.
இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் போது, இருவரின் உடலிலும் உயிர் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து, மூளைச் சாவு அடைந்தவரின் உடலில் இருந்து தலை அகற்றப்படும். அதற்கு பதிலாக, மற்ற தலை அந்த உடலில் பொருத்தப்படும். பிறகு, தலையை உடலில் இணைக்கும் அறுவை சிகிச்சையும் அதிவேகமாக செய்யப்படுகிறது.
இந்த வீடியோ வைரலாக உலகம் முழுவதும் பல கோடி பார்வையாளர்களை பெற்றுள்ளது.அதே நேரம் இது ஒரு கிராபிக்ஸ் வீடியோ மட்டுமே. உண்மையில் இப்படி ஒரு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படவில்லை.இப்படி சாத்தியம் இருப்பதாக அந்நிறுவனம் கூறுவதன் மூலம் உலகம் முழுவதும் முதலீடுகளை ஈர்க்க திட்டமிட்டுள்ளது. பிறகு, இது குறித்த சோதனைகளை அந்த நிறுவனம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.எனவே இது இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் சிகிச்சை அல்ல. மாறாக உயிருக்கு போராடும் மூளைச் சாவு அடைந்த ஒருவரின் தலையை எடுத்து, இன்னொருவரின் உடலில் பொருத்தி, பிழைக்க வைக்க முயற்சிக்கும் சிகிச்சை மட்டுமே.
உண்மையில் இது சாத்தியமானால், அது உலகில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தெரியாது. குறிப்பாக இதுபோன்ற சிகிச்சையை உலகின் பெரும் பணக்காரர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். சாதாரண மக்களுக்கு சாதாரண மருந்துகள் கூட கிடைக்காத இந்த உலகில், இதுபோன்ற சிகிச்சைகள் நிச்சயம் கிடைக்காது.
அதே நேரம் பணக்காரர்கள் தங்கள் உயிர் மீது உள்ள ஆசையால், அடுத்தடுத்த பிறவிகளை எடுக்க முயற்சிப்பார்கள். அதற்கு முதலில் இப்படி ஒரு சிகிச்சை வெற்றி பெற வேண்டும்.