உங்கள் குழந்தைகளுக்கு ஒன்றிய அரசின் விருது கிடைக்க ஒரு அரிய வாய்ப்பு!

விளையாட்டு, சமூக சேவை உள்ளிட்ட துறைகளில் தாக்கம் ஏற்படுத்திய குழந்தைகளுக்கு விருது…
ஒன்றிய அரசின் சார்பில் கவுரவிக்கப்படுவார்கள் என சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…
விளையாட்டு, சமூக சேவை, அறிவியல், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் சமூகத்தில் பரவலான மற்றும் வெளிப்படையான தாக்கத்தை ஏற்படுத்திய 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால புரஸ்கார் விருதுகள் வழங்கப்படுகின்றன. இதற்காக தகுதியுடையவர்கள் awards.gov.in என்ற இணையதளத்தில், ஜூலை 31க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இதுகுறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே ஒன்றிய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், ஆண்டுதோறும் ‘பிரதம மந்திரி ராஷ்ட்ரிய பால புரஸ்கார்’ விருதை வழங்குவதாக தெரிவித்துள்ளார்.
இது தன்னலமற்ற செயல்களைச் செய்த குழந்தைகளுக்கும், வீர, தீர செயல்களை செய்த சிறந்த சாதனைகள் கொண்ட சிறு குழந்தைகளுக்கும் உரிய அங்கீகாரம் அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார். இந்த விருது பெறுபவர்கள் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 26ம் தேதி ‘வீர் பால திவாஸ்’ என்று அறிவிக்கப்படுவார்கள். இந்த விருதை பெற 18 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும். awards.gov.in என்ற இணையதளத்தில் ஜூலை 31க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலிக்கப்படும். மேலும் பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால புரஸ்காருக்கான வழிகாட்டுதல்களை அறிய அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும். என சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
====