தேமுதிகவில் இருந்து வந்தவருக்கு பதவி – தாம்பரம் விஜய் ரசிகர்கள் கொந்தளிப்பு!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இதுவரை 95 மாவட்டங்களுக்கு செயலாளர்களை நியமித்துள்ளார். இந்தச் சூழலில் இறுதிக் கட்ட மாவட்டச் செயலாளர்கள் பட்டியலை விஜய் வெளியிட்டார்.அதன்படி செங்கல்பட்டு வடக்கு மாவட்டமாக செயல்பட்டு வந்த விஜய் மக்கள் இயக்கத்தை தாம்பரம், பல்லாவரம் ஆகிய இரு தொகுதிகளை தனி தனியாக பிரித்து தற்போது இரு மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி பல்லாவரம் தொகுதி மட்டும் செங்கல்பட்டு வடக்கு மாவட்டமாக அறிவிக்கப்பட்டு அதன் மாவட்ட செயலாளராக ஏற்கனவே விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவரான மின்னல் குமாரை மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டார்.அதே நேரத்தில் தாம்பரம் தொகுதியை புதிய மாவட்டமாக உருவாக்கி செங்கல்பட்டு வடமேற்கு மாவட்டமாக புதியதாக அறிவிக்கப்பட்டு புதிய மாவட்ட செயலாளராக சரத்குமார் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த புதிய மாவட்ட செயலாளருக்கு கட்சிகுள்ளே கடும் எதிர்ப்பு தற்போது கிளம்பி உள்ளது. குறிப்பாக தளபதி விஜய் ரசிகர் மன்றமாக இருந்தபோது ரசிகர் மன்றத்திற்கு உழைத்த பலருக்கு பதவி வழங்கபடாமல் தேமுதிக கட்சியில் பல ஆண்டுகளாக இருந்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் விஜய் மக்கள் இயக்கத்தில் இணைந்த தாம்பரத்தை சேர்ந்த சரத்குமாருக்கு பதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக கடும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக விஜய் தான் நேரடியாக ஆலோசனை செய்து பதவிகள் வழங்கப்படுவதாக கூறப்பட்டாலும், பொதுசெயலாளர் புஸ்ஸி ஆனந்த் வழங்கும் பட்டியலை தான் விஜய் வெளியீடுவதாக கூறப்படுகிறது.மேலும் தாம்பரத்தில் தற்போது அறிவிக்கப்பட்ட நிர்வாகிகள் யாரும் ரசிகர் மன்றமாக பணியாற்றிய யாருக்கும் வாய்ப்பு வழங்கப்படாமல், பணத்தை பெற்று கொண்டு பதவி வழங்கப்பட்டதாகவும் குற்றசாட்டு எழுந்துள்ளது