உலகம்

டிக் டாக்கில் லைக் வாங்குவதற்காக மனித தன்மையே இல்லாமல் செயல்பட்ட தந்தை!

காரின் மீது படிந்திருந்த பனித்துகள்களை துடைக்க, தனது 3 மாதக் குழந்தையை துடைப்பம் போல் பயன்படுத்தி, அதனை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார் அமெரிக்காவின் டெக்ஸாசை சேர்ந்த தந்தை ஒருவர்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. லைக்குகளை பெற வேண்டும், வியூஸ்களை பெறவேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக அவர் இப்படி செயல்பட்டது அம்பலமாகியுள்ளது.

இந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சியடைந்த போர்ட் ஆர்த்தூர் நகர அட்டர்னி இதுகுறித்து காவல்துறை தலைவருக்கு புகார் அனுப்பிய நிலையில், சம்மந்தப்பட்ட நபரை பிடித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் டிக்டாக்கில் இருந்தும் இந்த வீடியோ அகற்றப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் பிரபலம் அடைவதற்காக, இதுபோன்று பலரும் அறிவை இழந்து செயல்படுவது வேதனையை உருவாக்கியுள்ளது. இதுகுறித்து அமெரிக்க குழந்தைகள் நல ஆணையமும் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button