தமிழ்நாடு

விஸ்வரூபம் எடுக்கும் போதைப்பொருள் விவகாரம்.. ! நடிகர் ஸ்ரீகாந்தை தொடர்ந்து சிக்கிய நடிகர் கிருஷ்ணா….

 

 

கொக்கைன் போதைப்பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பிரபல நடிகர் கிருஷ்ணாவை விசாரணைக்கு ஆஜராக காவல்துறை உத்தரவிட்டிருந்த நிலையில் அவர் தலைமறைவாகி இருந்தார்.

 

 

சென்னை நுங்கம்பாக்கத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனியார் பார் ஒன்றில் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது இந்த மோதலில் அதிமுக தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி பிரசாத் உள்ளிட்ட ஒன்பது பேரை காவல்துறையினர் கைது செய்தனர் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கொக்கைன் என்னும் போதே பொருள் பயன்படுத்தி இருப்பது தெரிய வந்தது இதனை அடுத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டன அதில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த பிரதீப் குமார் என்பவரிடம் இருந்து அதிமுக தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி பிரசாத் கொக்கை போதை பொருள் வாங்கியது தெரியவந்தது.

 

 

அதுமட்டுமின்றி பிரதீப் குமார் கனடா நாட்டை சேர்ந்த ஜான் என்ற நபருடன் இணைந்து போதைப்பொருள் பல்வேறு இடங்களில் விற்பனை செய்தது விசாரணையில் அம்பலமானது. தொடர்ந்து பிரதீப் குமார் வைத்திருந்த செல்போன் மற்றும் லேப்டாப்பை பறிமுதல் செய்த காவல்துறையினர் சோதனை செய்து பார்த்தபோது அதிமுக தொல்லை நுட்ப பிரிவு நிர்வாகி பிரசாத் மற்றும் நடிகர் ஸ்ரீகாந்த் உடன் அதிக நேர உரையாடல் இருப்பது தெரியவந்தது. மேலும் பிரசாத் இடமிருந்து நடிகர் ஸ்ரீகாந்த் போதை பொருள் பெற்றது தெரிய வந்தது.

 

 

இதனை அடுத்து கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு நடிகர் ஸ்ரீகாந்தை விசாரணைக்காக காவல்துறையினர் அழைத்து சென்றனர் அப்போது ஸ்ரீகாந்த் இடம் நடத்தப்பட்ட விசாரணைகள் நான் போதைப்பொருள் பயன்படுத்தியது கிடையாது என்று கூறினார். இதில் சந்தேகமடைந்த காவல்துறையினர் உடனடியாக அவருக்கு ரத்த பரிசோதனை மற்றும் தடையவியல் நிபுணர்களுடன் பரிசோதனை மேற்கொண்டன. தொடர்ந்து இந்த பரிசோதனைகள் அவர் கோகையின் போதை பொருள் பயன்படுத்தியதும் கைரேகையில் இருந்து 50 கிராம் போதை பொருள் தூள்கள் கிடைத்தது. இதனை அடுத்து நடிகர் ஸ்ரீகாந்த் வீட்டை காவல்துறையினர் சோதனை செய்தனர் அதில் ஒன்பது காலியான கோக்கன் பாக்கெட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது

 

 

இதனைத் தொடர்ந்து நடிகர் ஸ்ரீகாந்தை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தினர் அப்பொழுது பிரசாத் தன்னை வைத்து படம் இயக்கியதாகவும், தனக்கு 10 லட்சம் ரூபாய் பாக்கி தரவேண்டும் என்று நடிகர் ஸ்ரீகாந்த் கூறி உள்ளார். மேலும் தனக்கு தரவேண்டிய 10 லட்சம் ரூபாய் பணத்தை கேட்கும்பொழுது எல்லாம் கொக்கின் போதை பொருள் கொடுத்ததாக கூறினர். இதனை மூன்று முறை பயன்படுத்தியதற்கு பிறகு தான் முழுமையாக அடிமையானதாக நடிகர் ஸ்ரீகாந்த் பரபரப்பு வாக்கு மூலம் அளித்தார்.

 

இதனைத் தொடர்ந்து போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைதான நிலையில், நடிகர் கிருஷ்ணாவை பிடிக்க 5 தனிப்படைகளை போலீசார் அமைத்துள்ளனர். கிருஷ்ணாவின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ள நிலையில் தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் தனிப்படை போலீசாரினால் நடிகர் கிருஷ்ணா கைது செய்யப்பட்டுள்ளார்..

 

 

 

அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.விசாரணையின் முடிவில் உரிய ஆதாரங்கள் கிடைத்தால் நடிகர் கிருஷ்ணா மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button