மீண்டும் ஸ்ட்ராங்கான கத்தார் – ஈரான் உறவு…!

நண்பன் கத்தாரிடம் சரண்டரான ஈரான்…
தோஹாவிற்கு அருகே அமெரிக்க விமானப்படை தளத்தின் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலுக்கும், கத்தாருடன் மோதுவதற்கு ஈரான் எந்த நோக்கத்தையும் கொண்டிருக்கவில்லை என ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் தெரிவித்துள்ளார்.
கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானியுடனான தொலைபேசியில் உரையாடிய ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன், தோஹாவிற்கு அருகிலுள்ள அமெரிக்காவின் விமானப்படைத் தளத்தின் மீது ஈரான் நடத்திய பதிலடித் தாக்குதலைத் தொடர்ந்து, தன்னையும் கத்தாரின் மதிப்பிற்குரிய மக்களையும் சமாதானப்படுத்துவதே தொலைபேசி அழைப்பை மேற்கொண்டதாக முதலில் உறுதிப்படுத்தினார்.
இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரான் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்கவே கத்தாரில் உள்ள அதன் விமானப்படைத் தளத்தின் மீது தாக்குதல் நடத்தியதாகவும், இதனை ஈரானுக்கும், நட்பு நாடானா கத்தாருக்கும் இடையிலான மோதலாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றும் வலியுறுத்தினார்.
மேலும் போரை நிறுத்த ஷேக் தமீம் எடுத்த அனைத்து முயற்சிகள் மற்றும் ஈரானியர்களுடனான ஆதரவு, ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்புக்கும் ஜனாதிபதி பாராட்டு தெரிவித்தார்.
கத்தாரில் உள்ள அமெரிக்க விமானப்படை தளம் ஈரானுக்கு எதிரான தாக்குதல்களுக்குப் பயன்படுத்தப்படவில்லை என்றும், பயன்படுத்தப்படாது என்றும் உறுதியளித்த கத்தார் அமீம் ஷேக், எதிர்காலத்தில் ஈரானுடனான எங்கள் உறவுகளை ஆழப்படுத்துவது மற்றும் விரிவுபடுத்துவது பற்றி நாங்கள் யோசித்து வருவதாகவும் கூறியுள்ளார்.