இஸ்ரேல் – சிரியா இடையே தொடரும் மறைமுக பேச்சுவார்த்தை…

சிரியா – இஸ்ரேல் பேச்சுவார்த்தை நிலவரம் என்ன? இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் பரபர அறிவிப்பு…
இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர், சிரிய அதிகாரிகளுடன் அரசியல் மற்றும் பாதுகாப்பு பேச்சுவார்த்தைகளை உறுதிப்படுத்தியுள்ளார்.
இஸ்ரேலுக்கும் புதிய சிரிய அரசாங்கத்திற்கும் இடையே தினமும் நேரடி பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக இஸ்ரேலிய தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் சாச்சி ஹானெக்பி தெரிவித்தார்.
நெசெட்டின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் குழுவினர் இரு தரப்பினருக்கும் இடையிலான பேச்சுவார்த்தை முயற்சியின் ஒரு பகுதியாக அரசியல் மற்றும் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு குறித்து பேசி வருவதாகவும், அந்த குழு இருநாட்டிற்கும் இடையிலான பேச்சுவார்த்தையை மேற்பார்வையிட்டு வருவதாக ஹானெக்பி தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலுக்கும் சிரியாவில் உள்ள ஆட்சியாளர்களுக்கும் இடையே அனைத்து மட்டங்களிலும் நேரடியான தினசரி பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், தான் அங்குள்ள அரசியல் அதிகாரிகளுடன் சேர்ந்து அதனை வழிநடத்துவதாகவும் கூறியுள்ளார்.
சிரியாவில் அல் அசாத் தலைமையிலான அரசு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கவிழ்ந்தது. அதிபராக இருந்த அல் அசாத் ரஷியாவுக்கு தப்பிச்சென்றார். இதையடுத்து, சிரியாவில் ஆட்சியை கைப்பற்றிய ஹயத் தஹிர் அல் ஷியாம் அதிபராக பதவியேற்றார்.
கடந்த மாதம் சிரியாவில் சன்னி பிரிவினருக்கும், டுரூஸ் மதத்தை சேர்ந்தவர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இஸ்ரேலிலும் டுரூஸ் மத மக்கள் வசித்து வருவதால் பதற்றத்தை தணிப்பதற்காக இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.