போர் நிறுத்திற்கு பின்னால் ஈரான் வைத்த ட்விஸ்ட்… உலக நாடுகள் பேரதிர்ச்சி…!

இஸ்ரேல்-ஈரான் போர் நிறுத்தம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தாலும், இரு நாடுகளிலும் மத்திய கிழக்கின் பரந்த பகுதியிலும் மிகப் பெரிய ஆபத்து உருவாகி வருகிறது.
ஆம், என்றைக்கு அமெரிக்கா ஈரானின் ஃபோர்டோவில் உள்ள அணுமின் நிலையத்தின் மீது B-2 ஸ்டெல்த் பாம்பர் குண்டுகளை வீசியதோ, அப்போதே மக்ரான் மலைகளுக்கு இடையே ஆழமாக புதைத்து வைக்கப்பட்டிருந்த 400 கிலோ செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை காணவில்லை என அமெரிக்க துணைத் தலைவர் ஜே.டி. வான்ஸ் உலக நாடுகளை கிடுகிடுக்க வைக்கும் தகவலை வெளியிட்டுள்ளார்.
இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரான் மீது தாக்குதலைத் தொடங்கிய அமெரிக்கா அந்நாட்டின் 3 அணு ஆய்வு மையங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியது. ஏனெனில் ஈரான் அணு ஆயுதங்களை தயாரிக்க முயற்சித்து வருவதாகவும் இது தங்கள் நாடுகளுக்கு அச்சுறுத்தலாக அமையும் என்பதே இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் குற்றச்சாட்டு. அதனால் தான் எடுத்த எடுப்பிலேயே அணு ஆய்வு மையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்நிலையில், அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் அளித்த பேட்டி ஒன்றில், ஈரான் சேமித்து வைத்து இருந்த 400 கிலோ செறிவூட்டப்பட்ட யுரேனியம் எங்கே போனது என தெரியவில்லை.
அமெரிக்காவின் தாக்குதலில் ஈரானின் அணுசக்தி நிலையங்கள் சேதம் அடைந்து இருக்கும் அல்லது அழிந்திருக்கும். ஆனால், அதனை உறுதிப்படுத்தப்படவில்லை. இருப்பினும் ஈரானின் அணுசக்தி திட்டங்களுக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டு உள்ளது என்றார்.
போர்டோவ் அணுசக்தி நிலையத்தை அழிப்பதே தாக்குதலின் நோக்கம் எனக்கூறியுள்ள அவர், மற்ற நிலையங்களுக்கும் சேதம் ஏற்படுத்த வேண்டும் என திட்டமிட்டதாகவும், தாக்குதலில், போர்டோவ் அணுசக்தி நிலையத்திற்கு பெரிய பின்னடைவு ஏற்பட்டு இருக்கும் என அமெரிக்கா நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
சரி, அந்த 400 கிலோ செறிவூட்டப்பட்ட யுரேனியம் எங்கே என விசாரித்தால், அமெரிக்கா தாக்குதல் நடத்துவதற்கு முன்னரே யுரேனியத்தை பாதுகாப்பான இடங்களுக்கு ஈரான் மாற்றியிருக்கக்கூடும் என தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்கா தாக்குதல் நடத்துவதற்கு முன்னர் போர்டோவ் அணுசக்தி நிலையங்கள் முன்பு 16 டிரக்குகள் வரிசையில் நின்றது செயற்கைகோள் எடுத்த புகைப்படம் மூலம் தெரியவந்துள்ளது. தாக்குதலுக்கு பிறகு அந்த இடத்தில் அந்த டிரக்குகள் காணப்படவில்லை. அதில் என்ன கொண்டு செல்லப்பட்டது என தெரியவில்லை என அமெரிக்க நாளிதழ் செய்தி வெளியிட்டு உள்ளது.