உலகம்

சிசிடிவி கேமராக்களை ஹேக் செய்து, டெக்ரானில் இருந்து, இஸ்ரேலை கண்காணிக்கும் ஈரான் அதிகாரிகள்!

இஸ்ரேலில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஈரான் அதிகாரிகள் ஹேக் செய்து, கண்காணித்து வரும் தகவல் வெளியாகியுள்ளது.தங்களது தாக்குதல்கள் துல்லியமாக இலக்குகளை தாக்குகின்றதா என்பதை டெக்ரானில் இருந்தே ஈரான் அதிகாரிகள் தெரிந்து கொண்ட தகவல் இஸ்ரேலை உலுக்கியுள்ளது.

 

இஸ்ரேலில் உள்ள தனியார் மற்றும் அரசு கட்டிடங்களில் பொருத்தப்பட்டுள்ள, சிசிடிவிக்களை ஹேக் செய்து, கண்காணிப்பில் ஈடுபட்டு வந்த ஈரானின் இஸ்லாமிய புரட்சி பாதுகாவல் படைகள், தாக்குதல் நடத்தி விட்டு, தங்களது ஏவுகணைகள் இலக்குகளை துல்லியமாக தாக்கியுள்ளனவா என்பதையும் கண்காணித்துள்ளனர்.

இதனை தாமதமாகவே கண்டுபிடித்ததாகவும், உடனடியாக அரசுக் கட்டிடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை முடக்கியுள்ளதாக இஸ்ரேல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button