உலகம்

குறி வச்சா இரை விழணும்… நெதன்யாகுவை நேருக்கு நேர் எச்சரித்த ஈரான்…!

இஸ்ரேலின் முக்கிய நகரங்கள் மீது ஈரான் சரமாரியாக ஃபட்டா-1 ஹைப்பர்சோனிக் உள்ளிட்ட ஏவுகணைகளை மழையாக பொழிந்து வருகிறது. ஈரானின் உச்சபட்ச தலைவர் காமேனியை கொன்று பழிதீர்ப்போம் என்று இஸ்ரேல் சூழுரைத்துள்ள நிலையில், இஸ்ரேல் ஈரான் இடையேயான மோதல் எட்டாவது நாளை எட்டியுள்ளது.

போர் தொடங்கியதில்லிருந்து. இதுவரை 450 பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 1000 ட்ரோன்களை ஈரான் ஏவிய நிலையில் அவற்றில் பெரும்பாலான ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பான அயன் டோம் இடைமறித்து அழித்துள்ளது.

அதை தொடர்ந்து தாக்குதல் உத்தியை மாற்றியுள்ள ஈரான் இதுவரை பயன்படுத்தாத ஹைப்பர்சோனிக் ஏவுகனைகளை களமிறக்கி உள்ளது. ஒலியை விட ஐந்து மடங்கு வேகத்தில் மணிக்கு 6500 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும் ஃபட்டா-1 ஹைப்பர்சோனிக் ஏவுகணை மற்றும் செஜ்ஜில் ஏவுகணைகள் மூலம் இஸ்ரேலை ஈரான் திணறடித்து வருகிறது.

இந்த ஏவுகணைகள் ஈரானின் நடான்ஸ் ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்ட வெறும் ஏழு நிமிடத்தில் இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் நகரை தாக்கும் திறன் கொண்டுள்ளதாக தெரிகிறது. இந்த ஹைப்பர்சோனிக் ஏவுகனைகள் காற்றில் ஒருக்கும்போது அவற்றின் பாதையை மாற்றும் திறனை கொண்டுள்ளதோடு மின்னல் வேகத்தில் பாய்ந்து செல்வதால் அவை இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்புகளுக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது.

Iran Fires Hypersonic Missiles at Israel as Khamenei Vows 'No Mercy' – The  Truth International

குறிப்பாக ஈரான் நேற்று வீசிய ஏவுகணையில் ஒன்று பல வெடிகுண்டுகளுடன் கூடிய ஏவுகணை என்று தெரிகிறது. இந்த ஏவுகணை விழும் நேரத்தில் பல்வேறு பாகங்களாக பிரிந்து விழுந்ததாகவும் அவற்றை தொட்டால் வெடிக்கும் வகையில் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேல் குற்றம் சாட்டி உள்ளது. இப்படி விதவிதமாக ஈரான் நடத்தி வரும் தாக்குதல்களை சமாளிக்க முடியாமல் திணறி வரும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிற்கு மற்றொரு அதிர்ச்சியை ஈரான் கண் முன் காட்டியுள்ளது.

இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் நகரில் ஏற்பட்டுள்ள போர் சேதங்களை அந்நாட்டின் பிரதமர் நெதன்யாகு பார்வையிட்டார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்திக்க தயாரான போது, அவருக்கு பின்னால் இருந்த பெரிய கட்டிடம் ஒன்று திடீரென விழுந்து சல்லி, சல்லியாக நொறுங்கியது. ஈரானின் ஏவுகணையால் தாக்கப்பட்ட அந்த கட்டிடம் பலவீனம் அடைந்து சரிந்துள்ளது.

அதைப் பார்த்ததும் கண்களில் தெரிந்த மரண பீதியை மீடியா முன்னால் காட்டக்கூடாது என மறைத்துக் கொண்ட நெதன்யாகு, “என் கருத்தை சொல்லற கேட்கக்கூட அந்த கட்டிடத்துக்கு பொறுமை இல்ல” என முணுமுணுத்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

வைரலாகி வரும் இந்த வீடியோவை பார்க்கும் நெட்டிசன்களோ ஒருவேள நெதன்யாகு அந்த பில்டிங்கை பார்க்க கால் வைக்கும் போது இடிஞ்சி விழுந்திருந்த என்னவாகியிருக்கும் என்றெல்லாம் கமெண்ட் போட்டு கலாய்த்து வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button